Home

Saturday, September 4, 2010

உத்தராஞ்சல் .

உத்தராகண்டம்


உத்தரகண்ட் (உத்தராஞ்சல்), இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000ம் வருடம் நவம்பர் 9ம் நாள், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமய மலையில் அமைந்துள்ளது. தேஹ்ராதுன்் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசூரி, அல்மோரா, ராணிக்கெட் ,ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமய திருத் தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதர்நாத், பத்ரிநாத் ஆகியவையும் உத்தராஞ்சல் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.

மாவட்டங்கள்

உத்தராஞ்சல் மாநிலம், 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சமோலி, தேஹ்ராதுன், ஹரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும், அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 8,489,349 100%
இந்துகள் 7,212,260 84.96%
இசுலாமியர் 1,012,141 11.92%
கிறித்தவர் 27,116 0.32%
சீக்கியர் 212,025 2.50%
பௌத்தர் 12,434 0.15%
சமணர் 9,249 0.11%
ஏனைய 770 0.01%
குறிப்பிடாதோர் 3,354 0.04%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

No comments:

Post a Comment