Home

Wednesday, June 30, 2010

தமிழக தேர்தல் ஆணையம் :

தமிழக தேர்தல் என்பது இப்பொழுது பணம் காய்க்கும் மரம்போல் ஆகிவிட்டது.

இருப்பினும் அதன் அடிப்படை தெரிந்துகொள்வது நமது கடமைகளில் ஒன்று....

என்னடா இவைஎல்லாம் படித்ததுதானே என்று நினைக்கவேண்டாம் படித்ததால்தான் நமக்கு ஏன் என்று ஒதுங்கிவிடுகிறோம்.சிந்திக்க நேரமில்லை என்று ஒவ்வொருவரும் தன்னைசுற்றி இருப்பவர்களிடம் மட்டுமே கருத்துகளை பரிமாறிகொள்கிறோம். தமிழகத்தில் எத்தனையோ ஜாதி,மதங்களுக்கு இடையில் தேர்தல் மட்டுமே பாதியல் ஒற்றுமையுடன் இருக்கிறது.ஓட்டுரிமை என்பது இந்திய குடிமகனின் பிறப்புரிமை அதனாலென்னவோ எல்லா மதமும்,ஜாதியும் எல்லா கட்சியிலும் இருக்கின்றனர்.

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்- தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆவார். மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு திருத்தச் செயல் சட்டத்தின் கீழ் மாநிலம் மாற்றும் ஆட்சிப் பிரதேசங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த அதிகாரங்கள் பெற்றது. அவ்வாணையத்தின் தலைவரான தலைமைத் தேர்தல் ஆணையர்

மாநகராட்சி,
மாவட்ட ஊராட்சி,
ஊராட்சி ஒன்றியம் மற்றும்
கிராம ஊராட்சி
இவைகளின் தேர்தல்களை நடத்தக்கூடியவர் ஆவார்.

மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரின் படி நிலை உயர் நீதி மன்ற நீதிபதிக்கு இணையாகக் கொண்டது.தமிழ் நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரை தமிழக ஆளுநரே நியமன்ம் செய்கின்றார். மாவட்ட அளவில் மாவட்டத் தேர்தல் அலுவலர், மற்றும் மாவட்ட ஆட்சியரால் தேர்தல் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உள் அமைப்புத் தேர்தல்களை தேர்தல் அலுவலர் (ரிட்டனிங் ஆபிசர்) நடத்துகின்றார்.இதன் தற்பொழுதயத் தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக திரு. டி.சந்திர சேகரன் இ ஆ ப பதவி வகிக்கின்றார்.

தமிழகத் தேர்தல்கள்

நேரடித் தேர்தல்

தமிழ் நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ் நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.

மறைமுகத் தேர்தல்

இது தவிர மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.

நேரடித் தேர்தல்கள் எண் தேர்தல்கள் தொகுதிகள்
1 சட்டப் பேரவை 234
2 மக்களவை 39

மறைமுகத் தேர்தல்கள் எண் தேர்தல்கள் தொகுதிகள்/இருக்கை
1 மாநிலங்களவை 18
2 குடியரசுத் தலைவர் 1
3 குடியரசுத் துணைத் தலைவர் 1

உள்ளாட்சி நேரடித் தேர்தல்கள்.எண் அலுவலகம் இருக்கைகள் / அலுவலகம்
1 மாநகராட்சி மேயர் 6 (தற்பொழுது 10)
2 மாநகராட்சி உறுப்பினர்கள்
(கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்) 474
3 நகராட்சித் தலைவர்கள் 102
4 நகராட்சி உறுப்பினர்கள் 3,392
5 மூன்றாம் படி நகராட்சித் தலைவர்கள் 50
6 மூன்றாம் படி நகராட்சி உறுப்பினர்கள் 969
7 மாவட்ட ஊராட்சி வட்ட (வார்டு) உறுப்பினர்கள் 656
8 ஊராட்சி ஒன்றிய வட்ட உறுப்பினர்கள் 6,570
9 பேரூராட்சித் தலைவர்கள் 561
10 பேரூராட்சி வட்ட உறுப்பினர்கள் 6,825
11 கிராம ஊரட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்) 12,618
12 கிராம ஊராட்சி வட்ட உறுப்பினர்கள் 97,458

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்கள்எண் அலுவலகம்
1 நகராட்சி அமைப்புகள்
2 மாநகர மேயர் மற்றும் துணை மேயர்
3 நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
4 மூன்றாம் படி நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
5 பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
6 சட்டப்படித் தேவைப்படக்கூடிய நிரந்தர உறுப்பினர்க்ள

தமிழக சட்டப் பேரவைத் தலைவர்

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார். மேலும் அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும் இவர் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் தற்போதைய தலைவர் ஆவுடையப்பன்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்தவர்களும் அவர்களது பதவிக்காலங்களும் குறித்த பட்டியல்

பெயர் பதவி வகித்த காலம்
1 - துலுசு சாம்பமூர்த்தி 15-07-1937 முதல் 25-07-1942
2 - ஜே.சிவசண்முகம் பிள்ளை 25-05-1946 முதல் 21-04-1952 & 06-05-1952 முதல் 15-08-1955
3 - என்.கோபாலமேனன் 27-09-1955 முதல் 30-10-1956
4 - யு.கிருஷ்ணராவ் 30-04-1957 முதல் 03-08-1961
5 - எஸ்.செல்லப்பாண்டியன் 31-03-1962 முதல் 14-03-1967
6 - சி.பா.ஆதித்தனார் 17-03-1967 முதல் 12-08-1968
7 - புலவர் சு.கோவிந்தன் 22-02-1969 முதல் 14-03-1971 & 03-08-1973 முதல் 03-07-1977
8 - கே.ஏ.மதியழகன் 24-03-1971 முதல் 02-12-1972
9 - முனு ஆதி 06-07-1977 முதல் 18-06-1980
10 - க.ராசாராம் 21-06-1980 முதல் 24-02-1985
11 - பி.எச்.பாண்டியன் 27-02-1985 முதல் 05-02-1989
12 - மு.தமிழ்க்குடிமகன் 08-02-1989 முதல் 30-06-1991
13 - சேடப்பட்டி முத்தையா 03-07-1991 முதல் 21-05-1996
14 - பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் 23-05-1996 முதல் 13-05-2001
15 - கா.காளிமுத்து 24-05-2001 முதல் 12-05-2006
16 - இரா.ஆவுடையப்பன் 13-05-2006 முதல்


நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

தமிழர் பண்பாடு ஒரு பார்வை :

பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே."தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்கங்களைக் கொண்டதாகும். ஒன்று: அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறைப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டாது, மாற்றாக சைவ சமயத்துக்கு தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு.

தமிழர் நிலத்திணைகள்

தமிழர் நிலத்திணைகள் என்பவை பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களாகும். இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.

காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.


குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு முருகன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன.கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: முருகன்
மக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி
விலங்குகள்: குரங்கு, கரடி
மலர்கள்: குறிஞ்சி, காந்தள்
மரங்கள்: வேங்கை, பலா
பண்: குறிஞ்சி யாழ்
தொழில்: கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல்

நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்
பறவைகள்: கடற் காகம்
விலங்குகள்: சுறா
மரங்கள்: கண்டல், புன்னை
பண்: மீன்கோட் பறை, விளரி யாழ்
தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல்


பாலை நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.இளவேனில், முதுவேனில், பின்பனி என்னும் பெரும் பொழுதுகளும் நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

பாலை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: கொற்றவை
மக்கள்: விடலை, காளை, மறவர், மறத்தியர்
பறவைகள்: புறா, கழுகு
மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
பண்: பாலை யாழ்
தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல்

மருதம் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மருபுச் சொல் என பலர் கருதுகின்றனர்.கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.


மருத நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: இந்திரன்
மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
பறவைகள்: நாரை, குருகு, தாரா
விலங்குகள்: எருமை, நீர்நாய்
மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை
மரங்கள்: காஞ்சி, மருதம்
உணவு: செந்நெல், வெண்நெல்
பண்: மருத யாழ்
தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்

முல்லை நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: திருமால்
மக்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்,யாதவர்,கோனார்
பறவைகள்: காட்டுக் கோழி
விலங்குகள்: மான், முயல், பசு
மலர்கள்: முல்லை, பிடா
பண்: பறை, முல்லை யாழ்
தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல்



தமிழர்களின் பண்பாட்டில் யானைகள்

தமிழர்களின் பண்பாட்டில் யானைகள்குறிப்பிடத்தக்க இடம் பெறுகிக்கின்றன.

பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இன்றும் தமிழகத்தின் பெரிய கோவில்களில் கோவில் யானைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியினரில் சிலர் யானைகளைப் பழக்குவதில் வல்லவர்கள். தமிழகத்தின் முதுமலை போன்ற பகுதிகளில் காட்டுமரங்களைக் எடுத்துக் கொண்டு செல்ல யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.தற்காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் பாகன்கள் யானைகளை அழைத்து வந்து யானையை ஆசி வழங்க வைத்து பணம் பெறுவதும் உண்டு.
பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் யானைகளைப் பற்றி நிறையக் குறிப்புகள் உள்ளன. யானைகள் தமிழில் கரி (நிறத்தால் ஏற்பட்ட பெயர்), களிறு (ஆண் யானை), பிடி (பெண் யானை), போன்ற பெயர்களால் வழங்கப்பட்டன. தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன.

பல ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்துவமான பண்பாட்டைக் கொண்டவர்களாக ஓரேயிடத்தில் வாழ்ந்துவருகின்ற தமிழருக்கு வானியல் துறையில் இருந்த அறிவையும், அது பற்றி அவர்கள் கொண்டிருந்த விளக்கங்களையும், அந்த அறிவை அவர்கள் பயன்படுத்திய முறைகளையும் தமிழர் வானியல் என்னும் தலைப்பில் இக் கட்டுரை விளக்க முயல்கிறது.
பண்டைக்காலத்தில், வானவியலுக்கு என்று தனியான நூல்கள் எதுவும் தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்கள் வாழ்க்கை முறைகள் நம்பிக்கைகள் மற்றும் பிற அம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவும் மிகப்பழைய எழுத்துமூல ஆவணங்கள் சங்க நூல்களேயாகும். சங்கப் பாடல்களை எழுதியவர்கள் பெரும்பாலும் சாதாரண புலவர்களே அவர்களிடம் வானியல் போன்ற துறைகளின் நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்க முடியாது. எனினும் வானியலோடு தொடர்புடைய, மக்கள் மட்டத்தில் புழங்கிய பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.



நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து நடப்போம் ......

தமிழ்நாடு அமைச்சரவை :

இந்த பதிவு படித்து புரிந்து தெளிவதற்காகவே....


தமிழக அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலைமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழுவை அமைச்சரவை எனப்படும்.

இவ்வமைச்சர்கள் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியக் கட்சியை ஆளுநரால் அழைக்கபெற்று அதன்படி அவர்களால் அமைக்கப்பட்டக் குழுவின் தலைவருக்கு முதலைமச்சர் பதவி ஏற்பும் இரகசியம் (கமுக்கம்) காப்பு உறுதிமொழி ஏற்பும், அத்தலைவரால் வழங்கப்பட்ட பட்டியிலின்படி இதர இலாக்கா அமைச்சர்களுக்கும் அதே போன்றே ஆளுநரால் பதவி ஏற்பும் செய்யப்பெற்றதற்குப் பின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர்.



சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் செயல்பாட்டிற்கும்

"தலித் முரசு” எழுப்பியுள்ள 50 சுயமரியாதைக் கேள்விகள், தமிழகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு, இக்கேள்விகளை மறு வெளியீடு செய்யும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இக்கேள்விகளை மீண்டும் வெளியிடுகிறோம். இக்கேள்விக் கணைகள் மீதான பரப்புரை தீவிரமாக்கப்பட்டால்தான் - அரசும் ஆளும் வர்க்கத்தினரும் பதிலளிக்க முன் வருவார்கள்.

1. தமிழ்நாட்டுக்கு ஆய்வுக்கு வந்த தேசிய பட்டியலின ஆணையத்திற்கு புள்ளி விவரம் தர மறுத்த அல்லது தருவதற்கு யோசனை செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

2. தமிழ்நாட்டிற்கு வருகை தந்த தேசிய பட்டியலின ஆணையத்திடம் தமிழ்நாட்டிற்கு பட்டியலின தொடர்பு அதிகாரிகள் (Liaison Officers) தேவை இல்லை என்று தலைமைச் செயலர் கூறியது உண்மையா? உண்மை எனில், பட்டியலின நலனுக்கு எதிராக ஆணையத்திடம் பேசிய தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

3. இந்திய அரசின் திட்டக்குழு (Union Planning Commission) அனுப்பிய 23.11.2009 நாளிட்ட கடிதத்தில் (M1304/24(TN) 2008குக(கு) 200910 பட்ஜெட்டில், பட்டியலின துணைத்திட்டத்தின் கீழ் ரூ.3250 கோடிக்குப் பதிலாக ரூ.2722 கோடிதான் திட்ட மதிப்பீட்டில் (BE) ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ஆகவே கூடுதலாக ரூ.528 காடியை திருத்த மதிப்பீட்டில் (RE) ஈடுசெய்ய வேண்டும் எனவும் வேண்டியவாறு செய்யப்பட்டதா? இல்லை எனில், ஏன் செய்யப்படவில்லை?

4. ஆதி திராவிடர் நலம், பள்ளிக் கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலம், வேளாண்மை ஆகிய துறைகள் தவிர வேறெந்தத் துறைகளும் பட்டியலினத்தவர்களுக்காக திட்ட ஒதுக்கீடு செய்யவில்லை என்பது உண்மையா? எனில், இதை மாற்ற அரசு முன்வருமா? எனில், 2010-11 இல் இத்துறைகளில் பிரித்தறியும் திட்டங்களில் (Divisible Schemes) பட்டியலினத் துணைத் திட்டஒதுக்கீடு வழங்க அரசு உறுதி செய்யுமா?

5. "தாட்கோ'வில் பட்டியலின ஒப்பந்ததாரர்களுக்கு என்று இருந்த தனித்திட்டத்தை "தாட்கோ' மேலாண்மை இயக்குநரும் ஆதி திராவிட செயலரும் காலாவதி ஆக்கியது அரசுக்குத் தெரியுமா? எனில், இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? பட்டியலினத்திற்கு எதிராக இந்த ஆணை உடனே விலக்கப்படுமா? (ஆதிதிராவிடர் நலச் செயலரின் 20800 / ஆதி திராவிடர் நலம் 5 / 08 4 நாள் : 8.2.2010)

6. பட்டியலினத்தவருக்கான கீழ்க்கண்ட அரசாணைகளை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளும், தலைமைச் செயலரும் மறுத்து வருவது அரசுக்குத் தெரியுமா? எனில், இந்த அரசாணைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு முன்வருமா?

1) அரசு ஆணை 65 / பற்றாளர் கூட்டம்.

2) தவறிழைக்கும் அதிகாரிகள் மீது தலைமைச் செயலர் நடவடிக்கை.

3) மேயர் சிவராஜ் ரூ.10 லட்சம் அறக்கட்டளை - சென்னை பல்கலைக் கழகம் - சட்டத்துறை

4) அயற்படிப்பு உதவி (Scholofships to study Abroad)

5) தலைமைச் செயலாளர் தலைமையிலான இடஒதுக்கீட்டு கண்காணிப்புக் குழு, (அ.ஆ.110, பணியாளர் நிர்வாகம், நாள்: 22.6.2000)

6) அரசு துறைகளில் பட்டியலினத்தவரின் இடஒதுக்கீடு நிரப்புதல் குறித்த ஆண்டறிக்கை (Annual Statement of SC Representation in Departments).

7. தலைமைச் செயலர் எல்லா செயலர்களுடன் நடத்தும் மாதக் கூட்டங்களில், பட்டியலின மக்கள் பற்றிய எந்த கருத்துகளும் பேசக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது அரசுக்குத் தெரியுமா? அப்படி இல்லை எனில், 2006 முதல் நடத்தப்பட்ட தலைமைச் செயலர் மாதக் கூட்டங்களில் எத்தனை கூட்டங்களில் பட்டியலின மக்களின் பிரச்சினைகள் பேசப்பட்டன என்பதைத் தெரிவிக்க அரசு முன்வருமா?

8. பட்டியலினத்தவருக்கான ஒதுக்கீடு, பட்டியலினச் சான்று வழங்குதல், பட்டியலினத்தவர் துணைத் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஆதிதிராவிடர் செயலருக்கு தலைமைச் செயலக நடைமுறை பனுவலில் (Secretariat Business Rules) அதிகாரம் படைக்கப்படவில்லை என்பது உண்மையா? எனில், உரிய அதிகாரத்தை வழங்க அரசு முன்வருமா?

9. பட்டியலின அமைச்சர்களும், பட்டியலின அதிகாரிகளும், பட்டியலினப் பணியாளர் சங்கங்களும், பட்டியலின சமூக அமைப்புகளும் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்லக்கூடாது என்று தடுக்கப்படுகிறார்கள் என்பது அரசுக்குத் தெரியுமா? அவ்வாறு கலந்து கொண்ட பட்டியலின அதிகாரிகள் யார் யார் மீது குற்றச்சாட்டு வனையப்பட்து எனத் தெரிவிக்க அரசு முன்வருமா? எதிர்காலத்தில் இவ்வாறு தடுக்காமல் இருக்க, உரிய அரசாணைகள் பிறப்பிக்கப்படுமா?

10. பட்டியலினத்தவர் துணைத் திட்டம் தொடர்பாக பட்டியலின அறிவர்களுடனும் (Experts) சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு திட்டக்குழுவும், அரசு திட்ட வளர்ச்சித் துறையும்,ஆதிதிராவிடர் துறையும் மறுத்து வருவது அரசுக்குத் தெரியுமா? எனில், இவர்கள் ஆண்டுக்கு மூன்று முறையாவது பட்டியலினத்தவர் துணைத் திட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்த அரசு ஆவன செய்யுமா?

11. 2008-09 துணை ஆட்சியர் பதவி உயர்வுப் பட்டியலில் 25 பட்டியலினத்துக்கான இடங்கள் நிரப்பப்படாமல் அநீதி விளைக்கப்பட்டது அரசுக்குத் தெரியுமா? எனில், அரசு ஆணையின்படி இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

12. புதுச்சேரியில் சுயநிதித் தொழிற் கல்லூரிகளில் பயிலும் பட்டியலினத்தவருக்கு, அக்கல்லூரிகள் வசூலிக்கும் முழுக்கட்டணத்தையும் உதவித் தொகையாக வழங்க அந்த அரசு முன் வந்துள்ளது போல, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்குமா?

13. தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் 1980களில் 20 சதவிகிதமாக இருந்த பட்டியலின மாணவர் எண்ணிக்கை, தற்போது 8 சதவிகிதமாகக் குறைந்து விட்டது அரசுக்குத் தெரியுமா? எனில், உரிய கல்வி உதவித் தொகைகள் தரப்படாமையே இதற்குக் காரணம் என்பதால், கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்க அரசு முன்வருமா?

14. +2 வில் பொது மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை (Enrolment Ratio) விட பட்டியலின மாணவர்களின் சேர்க்கை சதவிகிதம் 2 சதவிகிதம் கூடுதல் என்பது அரசுக்குத் தெரியுமா? ஆனால் கல்லூரி மாணவர் எண்ணிக்கையில் சேர்க்கை சதவிகிதம், பொது சதவிகிதத்திற்குள் பாதியாகக் குறைந்துள்ளது ஏன் என்பதை அரசு விளக்குமா?

15. தமிழக அரசில் அங்கீகாரம் பெற்ற, அரசு உதவிபெறும் 354 பள்ளிகளில் +2வில், 1 சதவிகித பட்டியலின மாணவர்கள் கூட சேர்க்கப்படவில்லை என்பதும், இப்படியுள்ள பட்டியலினத்தவர் / பழங்குடியின மாணவர்கள் இல்லாத தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இருப்பது, அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டும் எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, அரசுக்குத் தெரியுமா? எனில், அனைத்துப் பள்ளிகளிலும் +2 இல் 20 சதவிகிதத்திற்கும் குறையாமல் பட்டியலினத்தவர் / பழங்குடியின மாணவர்கள் சேர்க்கப்படுவதை அரசு உறுதி செய்யுமா?

16. 30 சதவிகிதத்திற்கும் மேலாக பட்டியலின மாணவர்களைச் சேர்க்கும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் உதவிபெறும் ஆசிரியர் பணியிடங்களை வழங்க அரசு முன்வருமா?

17. தமிழக அரசு கட்டித்தரப்போகும் கான்கிரீட் வீடுகள், ஏற்கனவே, மனைப்பட்டா உள்ளவர்களுக்குதான் (மாவட்ட நடப்புக் கணக்கெடுப்பின்படி) என்கிறபோது, பட்டா இல்லாத நத்தம் - புறம்போக்கில்

அல்லது அரசுப்புறம்போக்கில் தலைமுறைகளாக குடிசை வீட்டில் வாழும் பட்டியலினத்தவர் விடுபடப் போகிறார்களா? தமிழக அரசின் பட்ஜெட் புத்தகத்தில், சிறப்புக்கூறுத் திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் கணக்கில், கலைஞர் வீட்டுவசதித் திட்டமாக காட்டப்படுகிற ரூ.780 கோடி, பட்டியலினத்தவருக்கே என்று உறுதி செய்யப்படுமா? அல்லது பட்டா இல்லாத பட்டியலினத்தவருக்கு மறுக்கப்பட்டு, பட்டா உள்ள மற்றவருக்குப் போய்ச்சேருமா? இது குறித்து அரசு உரிய விளக்கம் தருமா?

18. 2006 தி.மு.க. கட்சியின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட அனைத்து உறுதிகளும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும், கீழ்வரும் மூன்று உறுதி அளிப்புகளில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அரசு அறியுமா? எனில், இம்மூன்று உறுதி அளிப்புகளையும் உடனே நிறைவேற்ற அரசு முன்வருமா?

1) “சிறப்புக்கூறு திட்டத்தினை சிறப்புறச் செயல்படுத்தி, முழுப்பலன்கள் அச்சமுதாய மக்களுக்கு உரிய காலத்தில் சேருவதற்குரிய முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.''

2) “தனியார் துறைகளிலும், மேலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத ஏனைய அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்படவேண்டுமென்று வலியுறுத்துவோம்.''

3) “மனிதக் கழிவை மனிதனே கையால் அள்ளும் கொடுமையை நிறுத்தி, அந்தப்பணியை ஆற்றி வருபவர்களுக்கு தகுதியான வேறு பணி வழங்கப்படும்.'' (மேற்கோள் குறிப்புகள்: தி.மு.க.தேர்தல் அறிக்கை 2006)

19. அனைத்துத் துறைத் தலைவர்களும் பட்டியல் இன பணியாளர்கள் புள்ளி விவரத்தை ஆதிதராவிடர் நல இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆணையை, இதுவரை எந்தத் துறையும் மதிக்கவில்லை என்பதை அரசு அறியுமா? எனில், அனைத்துத் துறைகளுக்குமான இந்த ஆண்டு அறிக்கையை ஆதிதிராவிடர் நல இணையதளத்தில் வெளியிட அரசு ஆவன செய்யுமா?

20. மய்ய அரசுத் துறைகளின் ஆண்டு அறிக்கையில் பட்டியலின பணியாளர் பற்றிய புள்ளி விவரம் ஆண்டாண்டு வெளியிடப்படுவதை அரசு அறியுமா? எனில், தமிழ்நாடு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்படும் கொள்கைக் குறிப்பு அறிக்கைகளில் இதைக் கடைப்பிடிக்க அரசு ஆவன செய்யுமா?

21. 2008ஆம் ஆண்டு 520 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு பட்டியலினத்தவர் பின்னடைவு நியமனம் செய்யப்படும் என அறிவித்து விட்டு, இதுவரை 420 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு பட்டியலினத்தவர் ஏமாற்றப்பட்டுள்ளதை அரசு அறியுமா? எனில், இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முறைகேடாக 2009இல் பொது நியமனம் மேற்கொண்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

22. தமிழக அரசில் மூன்றாம் அடுக்கு ஆளுகையில், பட்டியலினத் தலைவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கக்கூடிய இடங்களில், அவர்கள், பட்டியலினத்தவரல்லாதத் துணைத் தலைவர்களாலும், ஊராட்சி மன்றக் கணக்கர்களாலும் ஆதிக்கம் செய்யப்படுவது அரசுக்குத் தெரியுமா? இதனால், ஊராட்சி மன்றத் திட்ட முன்னுரிமை பட்டியலினத்தவர்க்கு மறுக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? எனில், இத்தகையப் போக்கைத் தடுத்து நிறுத்த அரசு என்னென்ன வழிவகைகளை மேற்கொள்ளப் போகிறது என்கிற விளக்கத்தை தமிழக அரசு பட்டியலினத்தவர்க்குத் தர முன்வருமா?

23. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு பட்டியல் இனத்தவரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற குறுகிய பார்வையைக் கொண்ட நடைமுறையை அரசு மாற்ற முன்வருமா?

24. 2 ஏக்கர் நிலம் வழங்கும் "தாட்கோ' திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது? யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? ஆளுக்கு எத்தனை ஏக்கர் வழங்கப்பட்டது? எவ்வளவு நிதி செலவிடப்பட்டது? என்ற புள்ளி விவரம், மாவட்ட வாரியாக 2010 - 11 பட்ஜெட் தொடரில் வெளியிடப்படுமா?

25. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பட்டியலினத்தவர் 40 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கிறார்கள் என்றபோதும், உயர்கல்வித் துறை நிதி ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவருக்கென்று தனியாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பதும், அவர்களுக்கு என்று தனியான திட்டங்கள் ஏதும் இல்லை என்பதும் உண்மையா? எனில், உயர்கல்வி பட்ஜெட்டில் பட்டியலின கல்லூரி மாணவர்களுக்கென்று தனித்திட்டங்களை கொண்டுவர அரசு முன்வருமா?

26. இதுவரை, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களில் (தனியார் உட்பட) 222 துணை வேந்தர்கள் பதவி வகித்திருப்பினும், பட்டியலினத்தவர் ஆறுபேர்மட்டுமே மிகக் குறுகிய காலத்திற்குத் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது, பட்டியலினத்தவர் உயர் கல்வியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்பதை அரசு உணர்ந்துள்ளதா? எனில், எதிர்காலத்தில் குறைந்தது 5 துணை வேந்தர்களாவது ஒரே காலத்தில் பட்டியலினத்தவராக இருப்பதை அரசு உறுதி செய்யுமா?

27. பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்ட 10 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் 9 லட்சம் ஏக்கருக்கு மேல் சாதி அதிகாரம் செய்பவர்கள் அபகரித்துவிட்டனர் என்பது உண்மையா? இந்த நிலங்களை பட்டியலினத்தவருக்கு மீட்டுத்தர, தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற முன்வருமா?

28. பழங்குடியினர் இடங்களைப் பாதுகாக்க, பிற மாநிலங்கள் எல்லாம் சட்டம் இயற்றி இருக்க, தமிழ்நாடு அரசு மட்டும் சட்டம் இயற்றாமல் இருக்கிறது என்பது அரசுக்குத் தெரியுமா?

29. நாடாளுமன்றத்தில் பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு இருப்பது போன்று தமிழ்நாட்டில் பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க, தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் மறுத்து வந்திருப்பதை இந்த அரசு அறியுமா? எனில், பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க இந்த அரசு உடனே முன் வருமா?

30. காலிப் பணியிடங்களை அறிவிக்கை செய்யும் போது, (Notifying Vacancies) பட்டியலினத்தவர் / பழங்குடியினர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடங்களைச் சரியாகக் குறித்து வெளியிட வேண்டும் என்ற அரசு ஆணைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், பல்கலைக் கழகங்கள் ஆகியோர் நடைமுறைப்படுத்த மறுத்து வருவதை அரசு அறியுமா? எனில், அவர்கள் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வருமா?

31. தமிழ்நாட்டில் உள்ள பட்டியலினத்தவர் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்னும் தமிழில் அறிவிக்கை செய்யவில்லை என்பதை அரசு அறியுமா? இந்தத் தமிழ்ப் பெயர்கள் கொண்ட பட்டியலை, தமிழ்நாடு அரசு உடனே அரசிதழில் வெளியிடுமா? அவ்வாறு வெளியிடும்போது பெயர்களுக்கு இறுதியில் "ன்' விகுதி போட்டு இழிவு செய்யாமல் "ர்' விகுதி போட்டு வெளியிட்டு, பட்டியலினத்தவரின் மாண்பைக் காக்க இந்த அரசு உடனே ஆவன செய்யுமா?

32. 50 சதகிவிதத்திற்கு மேல் பட்டியலினத்தவர் வாழும் கிராமங்கள், பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள், குக்கிராமங்கள் பட்டியலை அரசு வெளியிடுமா?

33. 50 சதவிகிதத்திற்கு மேல் பட்டியலினத்தவர் வாழும் கிராமங்கள், குக்கிராமங்கள், பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு பட்டியலினத் துணைத் திட்டத்தில் (Scheduled Caste Sub Plan) தனிவளர்ச்சித் திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்க அரசு ஆவன செய்யுமா?

34. முனைவர் படிப்பைத் தொடர பட்டியலினத்தவருக்கு 100 சதவிகித முழு கல்வி உதவித் தொகை வழங்க ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தலைக்கு ரூ.5 கோடி கொண்ட நிதிக்குவையை (Corpus Fund) உருவாக்க அரசு ஆவன செய்யுமா? எனில், ஓராண்டுக்கு 4 பல்கலைக்கழகங்கள் என 5 ஆண்டுகளுக்குள் இதை நிறைவேற்ற அரசு ஆவன செய்யுமா?

35. பட்டியலினத்தவர் நடத்தும் செய்தித்தாட்களுக்கும், காலமுறை இதழ்களுக்கும் அரசு விளம்பரம் தரக்கூடாது என்ற தடை இருப்பதை அரசு அறியுமா? எனில், அரசு தரும் விளம்பரங்களில் 20 சதவிகிதத்தை தலித் இதழ்களுக்குத் தர அரசு ஆணை பிறப்பிக்குமா?

36. தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து இந்தியப் பணி அதிகாரிகளுக்கும் (IAS, IPS, IFS) மாவட்ட வருவாய் அதிகாரிகள், துணை ஆட்சியர்கள் போன்ற முதல் வகுப்பு (Group I) அதிகாரிகளுக்கும் பட்டியலின துணைத்திட்ம் (SCSP, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (1989 PA Act), ஒதுக்கீடு விதிகள் (Reservation Rules) ஆகியன பற்றி ஆண்டுப்பயிற்சிகளை நடத்த அரசு உடனே ஆவன செய்யுமா?

ஆண்ணா மேலாண்மை நிறுவனம், பவானிசாகர் மாநிலப்பயிற்சி மய்யம், பஞ்சாயத்துகளுக்கான பயிற்சி மய்யம், தலைமைச் செயலகப் பயிற்சி மய்யம், மற்றும்திட்டக்குழு இவை யாவும் இந்தப் பொருள்கள் பற்றி பயிற்சி நடத்துவதைத் தடை செய்து வைத்துள்ளன என்பதையும் அரசு அறியுமா?

37. தமிழ்நாடு அமைச்சரவையின் வரிசைப் பட்டியலில் (Warrant of Precedence) பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களை கடைசி 5 இடத்திற்கு மேல் வைக்கக்கூடாது என்ற மரபு இதுவரை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை இந்த அரசு அறியுமா? எனில், பட்டியலின அமைச்சர்களை முதல் 5 இடத்தில் வரிசை வைக்க இந்த அரசு முன்வந்து பட்டியலினத்தவருக்கு மாண்பு செய்யுமா?

38. அரசு நடத்தும் தொழில்கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை (Admission) தரப்பட்ட பின்னர் கட்டணம் கட்ட முடியாமையால் 2009 - 10 ஆம் ஆண்டு மட்டும் 250 பொறியியல் கல்லூரிக்கு இடம் கிடைத்த பட்டியலினத்தவரும் 5 மருத்துவக் கல்லூரிக்கு இடம் கிடைத்த பட்டியலினத்தவரும் கல்லூரிகளில் சேர முடியாமல் போனது அரசுக்குத் தெரியுமா? எனில், அவர்களுக்கு நிதி உதவி செய்ய அரசிடம் போதிய நிதி இல்லாமல் போனதா என்பதை அரசு விளக்குமா?

39. பல ஆண்டு காலமாகத் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நடிகர் திரும்பத் திரும்ப “சண்டாளன், சண்டாளி, மாதாரி'' போன்ற வன்கொடுஞ்சொற்களைச் சொல்லி பட்டியலினத்தவருக்கு எதிராக வன்கொடுமை இழைத்துக் கொண்டு வருவதை அரசு அறியுமா? அதே போன்று திரைப்படப் பாடல்களிலும் இந்த வன்கொடுமை அரங்கேறி வருவதை அரசு அறியுமா? எனில், இவ்வன்கொடுமை இழைத்துவரும் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு ஆவன செய்யுமா?

40. 11ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்திற்காக க்எஇ தலைவர் தோராட் தலைமையிலான மய்ய திட்டக்குழு, பட்டியலினத்தவரின் வளர்ச்சிக்காக அளித்த அறிக்கைகளை தமிழ்நாட்டின் அனைத்து செயலர்களுக்கும், தலைமைச் செயலருக்கும், மாநிலத் திட்டக் குழுவிற்கும் அனுப்பி இருந்தும் - அனைவரும் அவ்வறிக்கையை இருட்டடிப்பு செய்துவிட்டது அரசுக்குத் தெரியுமா? எனில், அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அரசு ஆவன செய்யுமா?

41. அண்ணல் அம்பேத்கர் படத்தை தமது அலுவலகத்தில் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள், செயலர்கள், தலைமைச் செயலர் ஆகியோர் மறுத்து வருவதை அரசு அறியுமா? எனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?

42. சென்னை அடையாறு பகுதியில் அரசு அமைத்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு, இது வரை பட்டியலினத்து அமைச்சர்களைத் தவிர வேறு அமைச்சர் எவரும் இதுவரை சென்று வணங்கியது இல்லை என்பதை அரசு அறியுமா? எனில், இதை மாற்றுவதற்கு அரசு முன்வருமா?

43. அம்பேத்கர் பிறந்த நாளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் நடத்திச் சிறப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எதிர்த்து வருவதை அரசு அறியுமா? எனில், இதை மாற்ற அரசு முன்வருமா?

44. பதவி உயர்வில் ஒதுக்கீடு தருவது குறித்து 4 மாதங்களுக்குள் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் (WP 13780/1998 WP 14676 / 1996 Dt. 11.01.2007) இல் தீர்ப்பு வழங்கியும் அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தலைமைச் செயலர் தடுத்து வருவதை அரசு அறியுமா? எனில், உடனே கொள்கை முடிவை அறிவிக்க அரசு முன்வருமா?

45. அனைத்து பஞ்சாயத்து நூலகங்களுக்கும் அரசு செலவில் புத்தகங்கள் வாங்கித் தரும் திட்டத்தின் கீழ், தமிழில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் படைப்புகளை வாங்கத் தடை இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? எனில், அனைத்து நூலகங்களிலும் தமிழில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் படைப்புகளின் தொகுதிகள் 37 எண்களும் வழங்கப்பட, அரசு ஆவன செய்யுமா?

46. ஒவ்வோராண்டும் 20,000-க்கும் மேற்பட்ட பொறியியற் கல்வி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்படுவது அரசுக்குத் தெரியுமா? எனில், அந்தக் கல்வி காலி இடங்களை பட்டியலின (SC) மாணாக்கருக்கு ரூ.10,000 என்கிற கட்டணத்தில் வழங்க, தனியார்க் கல்லூரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு முன்வருமா? அந்தக் கட்டணத்தை முழுமையாக அந்தக் கல்லூரிகளுக்கு வழங்கவும் அரசு முன்வருமா?

47. அடிப்படைக் கட்டாயக் கல்வி மய்ய அரசினால் அடிப்படை உரிமையாக்கப்பட்டது போல, உயர்கல்வி பெறத் தகுதியான, 60 சதவிகித முதல் 80 சதவிகிதத்திற்கும் மேல்) மதிப்பெண்கள் பெறும் அனைத்துப் பட்டியலின - பழங்குடியின மாணாக்கருக்கும் உயர்கல்வி உரிமையாக்கப்பட அரசு ஆவன செய்யுமா?

48. 2009 - 2010 ஆம் ஆண்டு பட்டியலினத் துணைத்திட்டத்தில் ரூ.528 கோடி விடுபட்டதாக மய்யத்திட்டக்குழு கண்டுபிடித்து அறிவித்த தொகையை புதிய சட்டமன்ற கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா? இல்லையெனில், இந்தத் தொகை எப்படிச் செலவிடப்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்துமா?

49. பட்டியலின (SC) மாணாக்கருக்கு வழங்கப்பட்டுவரும், உயர்கல்விக்கான (Post Matric) கல்வி உதவித் தொகை, ஒவ்வோர் கல்வியாண்டும் செப்டம்பர் மாதத்திற்குமேல்தான் வழங்கப்பட்டு வருவதை அரசு அறியுமா? எனில், அதற்கு முதற்காரணம் நிதித்துறை ஒப்பளிப்பை, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரல் - மே திங்களிலேயே) வழங்க மறுத்துவருவதுதான் என்பதும் அரசுக்குத் தெரியுமா? எனில், கல்லூரி தொடக்க நாளன்றே கல்லூரிகளுக்கு கல்வி உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்யும் வண்ணம், முந்தைய மாதத்திலேயே உரிய தொகையை ஆதிதிராவிட நலத்துறைக்கு வழங்க, அரசின் நிதித்துறை முன்வருமா?

50. தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்க்கு சூரிய - மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்க, நிலங்களை வழங்க அரசு முன்வருமா? மய்ய அரசின் நாடாளுமன்றத்திலும், தமிழ்நாட்டு சட்டமன்றத்திலும் விடைகாண வேண்டிய பொதுவான, ஒரு நீண்ட நாளையக் கேள்வி: பட்டியலினத்தவர்களுக்கு மய்ய அரசின் பட்டியலினத் துணைத்திட்ட வழிகாட்டுதல்களின்படி, விகிதாச்சார ரீதியில், அணைத்துத் துறைகளுக்கு திட்ட ஒதுக்கீடு செய்யவில்லை. என்பது உண்மையா? (எ.கா. கீழ்க்காணும் துறைகள், மய்ய அரசிலும் சரி, மாநில அரசிலும் சரி, நிதிஒதுக்கீடே செய்வதில்லை) எனில், இதை மாற்ற அரசுகள் முன்வருமா? 2010 - 11 இல் இத்துறைகளில் பிரித்தறியும் திட்டங்களில் (Divisible Schemes) பட்டியலினத் துணைத்திட்ட ஒதுக்கீடு விகிதாச்சார ரீதியில் முழுமையாக வழங்க, தமிழக அரசு உறுதி செய்யுமா? வெறும் எண்களால் காட்டப்படும் (National Allocations) இந்த பட்ஜெட்டிலாவது தவிர்க்கப்படுமா?

மய்ய அரசிலும், மாநில அரசிலும் பட்டியலினத்தவர்களுக்காக பிரித்தறியும் திட்டங்களென்று, பட்டியலினத் துணைத் திட்டத்தின் கீழ் திட்ட ஒதுக்கீடு செய்ய முடியாதென்று சாதிக்கும் திட்டத் துறைகள்

மய்ய அரசிலும், மாநில அரசிலும் பட்டியலினத்தவர்களுக்காக பிரித்தறியும் திட்டங்களென்று, பட்டியலினத் துணைத் திட்டத்தின் கீழ் திட்ட ஒதுக்கீடு செய்ய முடியாதென்று சாதிக்கும் திட்டத் துறைகள்

மய்ய அரசின் துறைகள்

1. நிலக்கரி சுரங்கத் துறை

2. கனிம வள சுரங்கத் துறை

3. எக்கு உற்பத்தித் துறை

4. தரைவழிப் போக்குவரத்து

5. வேளாண்மை அறிவியல் மற்றும் கல்வி

6. ரசாயன மற்றும் எரிசக்தி ரசாயனத் துறை

7. வான்வழிப் போக்குவரத்துத் துறை

8. சுற்றுலாத் துறை

9. நுகர்பொருள் துறை

10. சர்க்கரை மற்றும் உணவு எண்ணெய்த் துறை

11. விநியோகத் துறை

12. அஞ்சலகத் துறை

13. இந்திய மருத்துவ இயல் துறை

14. பண்பாட்டுத் துறை

15. பொது நிறுவனத் துறை

16. கனரகத் தொழில் துறை

17. செய்தி ஒளிபரப்புத்துறை

18. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை

19. அணு-எரிசக்தித் துறை

20. கடலாராய்ச்சித் துறை

21. விண்வெளி ஆராய்ச்சித் துறை

22. கம்பெனி விவகாரத் துறை

23. பொதுப்பணித் துறை

மாநில அரசின் துறைகள்

1. பாசனநீர் கட்டுப்பாட்டுத்துறை

2. மின்சக்தித் துறை

3. தொழில் மற்றும் கனிம வளங்கள் துறை

4. சாலைப் போக்குவரத்துத் துறை

5. அறிவியல், தொழில் நுட்பம் சுற்றுச் சூழல் துறை

6. பொதுவானப் பொருளாதாரப் பணிகள்

7. கலை மற்றும் விளையாட்டுத் துறை

8. செய்தி விளம்பரத் துறை

9. நகர்பகுதி வளர்ச்சிப் பணி

10. மருத்துவத் துறை

11. தொழில் நுட்பக் கல்வித் துறை

12. நுகர் பொருள் வழங்கல் துறை

13. பொருளாதார ஆலோசனைகள் புள்ளி விவரத்துறை

14. உயிரின வாழ்க்கைச் சூழலும் சுற்றுச் சூழலும்

15. அறிவியல் பணிகளும் ஆராய்ச்சியும்

16. நடுத்தர மற்றும் பெருந்தொழில்கள் துறை

17. கிராம மற்றும் சிறுதொழில்கள் துறை

18. சுரங்கவியல் மற்றும் உலோகவியல் தொழில்கள் துறை

19. மரபுசாரா- நவீன எரிசக்தி ஆதாரத் துறை

20. பாசனப் பகுதி மேம்பாட்டுத் துறை

21. நிலச் சீர்திருத்தத் துறை

22. பால்பண்ணை வளர்ச்சித் துறை

23. ஆராய்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சித் துறை

தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் இனத்தவர் பெயர்களை "ர்' விகுதியோடு அரசு வெளியிடுமா?

ஆதி ஆந்திரர்
ஆதி திராவிடர்
ஆதி கர்நாடகர்
அஜிலர்
அருந்ததியர்
அய்யனவர்
பைரர்
பகுடர்
பாண்டி
பெல்லாரர்
பரதர்
சக்கிலியர்
சலவாடி
சமார், முக்கி
சண்டாளர்
செருமார்
தேவேந்திர குலத்தார்
தோம்பரர்
தொம்பர்
கோதகளியர்
கோத்தர்
கோட்டா
கோசாங்கி
ஹலையர்
ஜாக்கலியர்
ஜம்புலுவர்
கடையர்
கக்காலர்
காலடி
கணக்கர்
கரிம்பாலர்
கவரர்
கோலியர்
கூசா
கூத்தர்
குடும்பர்
குறவர்
மாதாரி
மாதிகா
மைலா
மன்னர்
மாவிலர்
மொகர்
முண்டாளர்
நாளகேயவர்
நாயõடியர்
பாடணர்
பகடையர்
பள்ளர்
பல்லுவர்
பாணர்
பஞ்சமர்
பன்னாடியர்
பன்னிலாடியர்
பறையர், சாம்பவர்
பறவர்
பாதியர், சேரமார்
புலையர்
புதிரை வண்ணார்
ரானேயர்
சமகரர், சாம்பர்
சபரி, செம்மார்
தாண்டர்
தோட்டி
திருவள்ளுவர்
வல்லோர்
வள்ளுவர்
வண்ணார்
வதிரியர்
வேலர்
வங்கனுர்
வேப்பூர் பறையர்
வேடர்
வெட்டியார்
வேட்டுவர்


2006 இல் நடைபெற்ற 13 வது சட்டபேரவை பொதுத் தேர்தலுக்குப்பின் அமைக்கப்பெற்ற, தற்பொழுதய அமைச்சரவை;

தமிழக அரசின் தற்பொழுதய அமைச்சரவை
வ.எண் பெயர் பொறுப்பு இலாகா சார்ந்தவை
1 கலைஞர் திரு. மு. கருணாநிதி [1] முதல்வர் பொது நிர்வாகம், இஆப, இகாப, ஏனைய அனைத்து இந்தியப் பணிகள் , லஞ்ச ஒழிப்பு, மாவட்ட வருவாய் அலுவலர்கள் இன்னும் பல இலக்கா ஒதுக்கப்படாத அமைச்சக மற்றும் நியமனம் செய்யப்படாத அமைச்சர்களின் பொறுப்புகளையும் கவனிப்பார்.
2 திரு. மு.க. ஸ்டாலின் துணை முதல்வர் பொது நிர்வாகம், இ,ஆ,ப, இ.கா.ப. ஏனைய அனைத்து இந்தியப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இன்னும் பல.,
3 திரு க அன்பழகன் நிதித் துறை அமைச்சர் நிதி திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள்.
4 திரு. ஆற்காடு நா வீராசாமி மின்சார துறை அமைச்சர்
5 திரு.கோசி மணி கூட்டுறவுத் துறை அமைச்சர்
6 திரு.வீரபாண்டி ஆறுமுகம் வேளாண்மைத் துறை அமைச்சர்
7 திரு. துரைமுருகன் சட்டத் துறை அமைச்சர்
8 திரு. டாக்டர் திரு.க . பொன்முடி உயர் கல்வித் துறை அமைச்சர்
9 திரு.கே.என். நேரு போக்குவரத்துத் துறை அமைச்சர்
10 திரு. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
11 திரு.நா.பழனிசாமி ஊரகத் தொழில் மற்றும் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர்
12 திரு. இ. பெரியசாமி வீட்டுவசதி மற்றும் வருவாய் துறை அமைச்சர்
13 திரு என். சுரேஷ் ராஜன் சுற்றுலாத் துறை அமைச்சர்
14 திரு.பரிதி இளம்வழுதி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்
15 திரு. தண்டாரம்பட்டு எ.வ. வேலு உணவுத் துறை அமைச்சர்
16 திரு. சுப தங்கவேலன் குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர்
17 திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்
18 திரு. தா.மோ. அன்பரசன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர்
19 திரு.கே.ஆர். பெரியகருப்பன் அறநிலையத் துறை அமைச்சர்
20 திரு. தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
21 திரு. எஸ்.என்.எம். உபயதுல்லா வணிகவரித் துறை அமைச்சர்
22 திரு. டி.பி.எம். மைதீன்கான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
23 திரு. என். செல்வராஜ் வனத் துறை அமைச்சர்
24 திரு. வெள்ளக்கோவில் சாமிநாதன் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
25 டாக்டர். திருமதி பூங்கோதை தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர்
26 திருமதி. கீதா ஜீவன் சமூக நலத் துறை அமைச்சர்
27 திருமதி. தமிழரசி ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்
28 திரு. கே.பி.பி. சாமி மீன்வளத் துறை அமைச்சர்
29 திரு. உ. மதிவாணன் பால் வளத் துறை அமைச்சர்
30 திரு. கா. இராமச்சந்திரன் கதர் வாரியத் துறை அமைச்சர்

தமிழ் இலக்கியம் ஒரு பார்வை :

இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாக பிரிக்கலாம்:

இன்பியல் இலக்கியம்
அறிவியல் இலக்கியம்

'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்". அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாக தரும் இலக்கியம்.

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாம். எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் புரிந்தோரும், மற்றும் பெண்களும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளது.பண்டைத்தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் எமக்கு அறியத்தருகின்றன்.

தற்கால இலக்கியம்

18ஆம், 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது.அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும்,இலக்கியமும் இக் காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன.

தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது "இலக்கிய வளர்ச்சி அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்" ஏற்பட்டிருக்கலாம்.[3] அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல் தமிழில் இன்பியல் இலக்கியத்தையே பெரும்பாலும் குறித்து நிற்கின்றது. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய எழுத்துக் கலை வடிவங்களே இன்று தமிழ் இலக்கியம் என பொதுவாக கருதப்படுகின்றது.


தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில் வடமொழியுடனும் தற்கால ரீதியில் ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாக தெரியும். இன்று அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி அறிவியல் தமிழை வளக்க தமிழ்நாடு அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெருதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம் இலக்கியத்துக்காக என்பதை விட இலக்கியம் மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம்.

மொழிச்செயற்பாடுகளில்ஒரு பகுதியை இலக்கியம் என்ற குடும்பத்துக்குள் வரையறுப்பதை நாமறிவோம். கவிதை, சிறுகதை, நாவல், போன்ற வரைப்படுத்தலுக்குள் மொழி இடமாற்றப்படும் போது இலக்கியம் என்ற நிலைப்பாட்டை இலகுவில் அடைந்துவிடுகிறது. இது கடந்த 25 நூற்றாண்டுகளாக மொழி குறித்த ஒரு நிலைப்பாட்டிற்கு தள்ளிவிடுவதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மொழியின் பிற செயற்பாடுகளான (இலக்கியமற்றது என கருதப்படுபவை) வற்றிலிருந்து இலக்கியம் வேறுபடுத்தப்படுவதற்கான காரணங்களை அறிய முற்படும் வாசிப்புக்கள் இல்லாமலே போயிற்று.


== இலக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகவும், இதுதான் இலக்கியம் என்று முற்று முழுதான அர்த்தம் கிடைத்துவிட்டதுமான ஒரு நிலை பாதுகாக்கப்படுவதை அவதானிக்கலாம். இலக்கிய குடும்பத்துக்குள் வரைப்படுத்;தப்படுகின்ற அல்லது தள்ளப்படுகின்ற கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றுக்கும் இந்நிலையே பெரிதும் பராமரிக்கப்படுகின்றது. மேற்குறித்தவைகளுக்கான அர்த்தங்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதற்கு எங்கோ அப்பாலிருக்கிறது எனக் கருதப்படுகிறது. அவை நிலையான அர்த்தங்களை அல்லது மோட்ச நிலையை எட்டிவிட்டது என்றும் கருதப்படுகிறது.

இலக்கியம் என்ற குடும்பத்துக்குள்ளே கண்டுணரும் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, பின்நவீனகவிதை (இதுபோல சிறுகதை, நாவல் போன்றவற்றை பொருத்திப் பார்க்கவும்) போன்ற கருத்தாடல்களை பொருள் கொள்வதற்கும் பரிசீலிப்பதற்கும்; ஆட்படக்கூடியவை என்ற நிலைப்பாடுகளை நோக்கியே அதிகம் அக்கறை ஏற்படுத்தப்படுவதை அறிவோம். நிலையான பொருளை எட்டிவிட்ட அல்லது அர்த்தத்தை மாற்றமற்ற நிலைக்கு கொண்டு சென்று முழுமையை எய்திவிட்ட கருத்தடைவுகளுக்கு கீழே (இலக்கியம்) நிரற்படுத்தப்படும் கருத்தாடல்களை மாத்திரமே கவனிப்புக்குள் நடமாட விட வேண்டும் என்ற இந்த நிலையை இன்னும் என்னவென்று பேசுவோம்? இலக்கியமற்றது என்ற பகுதிக்குள் இனங்காணும் மொழிச் செயற்பாடுகளுக்கும் இலக்கியம் என அடையாளப்படுத்தும் மொழிச் செயற்பாடுகளுக்குமிடையே பரிந்துரைக்கப்படும் வேறுபாடுகளை கவனித்தோமானால் அவை இரண்டு பகுதிக்குள்ளும் அப்பாவித்தனமாக பல்லிளித்துக் கொண்டிருப்பதை அறிவது சிரமமல்ல.

ஒரு சிறு விளம்பரத்தில் கூட இலக்கியத் தன்மையை கண்டுகொண்ட பின்நவீன சிந்தனையாளர்கள் அதிரடியாக அறிவித்த ஒரு அறிவிப்புத்தான் ‘பிரதி’ என்பதாகும். இலக்கியம் என்று பொதுவாக உணரக்கூடிய பண்புகளின் கட்டமைப்பை தெரிந்துகொள்வதாக அறிவிக்கும் போது இலக்கியம் என்பது தமக்குத் தெரிந்த ஒன்றாக மாறிவிடுவதை கட்டுடைத்துக் காட்டினார்கள். ஏற்கனவே நன்றாக அறிந்துள்ள இலக்கியம் என்ற பொருளின் பொது இயல்பைப் பற்றிய ஒரு பகிர்ந்துகொள்ளலாக இருக்கலாம். இலக்கியமற்றதாக கருதப்பட்டவற்றில் ‘இலக்கியத்தன்மை’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதிலிருந்து இலக்கியம் என்ற கருத்தாக்கம் இன்னும் சிக்கல் நிறைந்ததாகவும், கடும் மூளை உழைப்பைக் கோருவதாகவும் மாற்றம் பெறுவதோடு ஏற்கனவே இலக்கியம் என்று புரிந்து கொள்ளப்பட்ட பண்புகளினதும், நிலையான அர்த்தமுடையது போன்ற கட்டுக்கதைகளினதும் சிதைவையும் அறிவிக்கிறது என்பதை புரிந்து கொள்வோம்.இலக்கியம் என்பது மைய நீரோட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பீடுகளுக்கான அர்த்தத்தை புதுப்பிக்கும் மொழிச் செயற்பாடு எனக் கருதிவந்ததையும் சிதைத்து விடுவதையும் அவதானிக்கலாம்.


தமிழை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பேசி வருவது ஒரு மரபாக இருக்கிறது. இயல் தமிழ் என்பது என்ன..? என்பதை விளக்க நமக்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் தொடங்கிப் பழைமையான இலக்கணநூல்கள் இருக்கின்றன. ஆனால் இசைத்தமிழ் இதுதான் என்று விளக்குவதற்கும் நாடகத் தமிழின் இலக்கணம் இவையெனச் சொல்வதற்கும் முறையான இலக்கணநூல்கள் தமிழில் இல்லை. இருக்கின்ற இலக்கண நூல்கள் காலத்தால் மிகப் பிற்பட்டவை. குறிப்பாகப் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவையும் தமிழ் மொழி வழங்கும் நிலப் பரப்பிற்குள் பிறமொழியாளர்களின் வருகையோடு இசையும் நாடகமும் அறிமுகமாகி அவற்றின் இலக்கணங்களை விளக்கத் தொடங்கிய பின்பு எழுதப்பட்டவை. பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் அறிமுகமே பரிதிமால் கலைஞர் எனத் தன்னை அழைத்துக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியாரை நாடகவியலை எழுதத் தூண்டியது. விபுலானந்த அடிகள், ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்களின் முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக இருந்தவை கர்நாடக சங்கீதத்தின் வரைமுறைப் பட்ட இசையியல் என்பதை இன்று மறுப்பது எளிமையல்ல. ஆனால் அரங்க நிகழ்வுகள் மற்றும் நாடகங்களின் மேடை யேற்றம் என்பன மிகத் தொன்மையானவை என்பதற்கான ஆதாரங்கள் நமக்கு உள்ளன.உலக மொழிகளில் தமிழைப் போலவே மூத்த மொழிகளாகக் கருதப்படும் சமஸ்கிருதத்திலும் கீரீக் மொழியிலும் தோன்றிய இலக்கண நூல்கள் நாடக இலக்கணத்தைச் சொல்வதிலேயே முனைப்புக் காட்டியுள்ளன. கிரேக்க நாட்டில் தோன்றிய சிந்தனையாளன் அரிஸ்டாடில் எழுதிய கவிதையியலில் - (Poetics), நாடகத்தின் கட்டமைப்பு, நாடகங்களின் வகைகள், நாடகக் கதாபாத்திரங்களின் இயல்புகள், நாடகங்கள் எழுப்ப வேண்டிய உணர்வுகள் என எல்லா வற்றையும் விரிவாகப் பேசியுள்ளார். இதே போல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள நாட்ய சாஸ்திரத்திலும் நாடகம் பற்றிய அனைத்து விவரங்களும் கிடைக்கின்றன.

பரத முனியால் எழுதப் பட்ட அந்நூல் நடனத்தின் இலக்கணத்தைச் சொல்வதின் தொடர்ச்சியாக நாடக இலக்கணத்தையும் சேர்த்தே சொல்கிறது. தமிழில் நாட்ய சாஸ்திரம் போன்ற தொரு நூலோ, கவிதையியல் போன்றதொரு நூலோ இல்லை என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம்.இவ்விரு நூல்களும் நடனம் தான் நாடகத்தின் தொடக்கம் என்கின்றன. அதன் தொடர்ச்சியாக நிகழ்த்திய ஆய்வுகள் குறிப்பாகச் சடங்கு சார்ந்த நடனங்கிலிருந்தே நாடகம் தோற்றம் கொண்டுள்ளது என உறுதி செய்துள்ளன.
தமிழின் தொல் இலக்கியங்களான அகக் கவிதைகளும் புறக்கவிதைகளும் சிலப்பதிகாரம் போன்ற தொடர்நிலைச் செய்யுள்களிலும் சடங்கு சார்ந்த நடனங்கள் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன.வேலன் வெறியாட்டு, துணங்கைக் கூத்து , பின் தேர்க்குரவை, முன் தேர்க்குரவை போன்றனவும் குரவைக்கூத்து, சாக்கைக் கூத்து , விநோதக் கூத்து, சாந்திக்கூத்து , ஆய்ச்சியர் குரவை போன்றனவும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் பதினோராடல்களும் பண்டைத் தமிழகத்தில் வழக்கில் இருந்த நடனமுறைகள் எனலாம். இவை தவிர கும்மி, கோல், கரகம், கழியல், சதிர் போன்ற ஆட்ட முறைகளும் தமிழகத்தில் பாரம்பரியமாக நிகழ்ந்து வந்த குறிப்புக்கள் கிடைக்கின்றன. ஆனால் கதை தழுவிய காட்சி வரிசைகளாக நாடகம் நிகழ்ந்த குறிப்புக்களோ பிரதிகளோ கிடைக்கவில்லை. அப்படியானால் முத்தமிழில் ஒன்றான நாடகம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழக்கூடும்.
ஐரோப்பியர்களின் வருகையால் இங்கு அறிமுகமான சிறுகதை, நாவல் போல நாடகமும் அவர்களோடு வந்தது என்ற ஐயம்கூட வரலாம். இந்த ஐயம் முழுமையும் உண்மையல்ல. ஆனால் இன்று நாடகம் என்று நிகழ்த்தப்படுகின்ற கலைவடிவத்தில் ஐரோப்பியர்களின் பங்கு சரிபாதியாக இருக்கிறது என்பதும் உண்மை. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு தெருக்கூத்து என்ற பெயரில் கதை தழுவிய நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளனர். தஞ்சைப் பகுதியில் இன்னொரு நாடகவடிவமாக பாகவத மேளா நிகழ்ந்து வந்துள்ளது. அதன் மொழி வடிவம் தெலுங்காகவும் இசைவடிவம் கர்நாடக இசை வடிவமாகவும் இருக்கிறது.
மற்றொரு நாடகவடிவமாக மராத்தியச் சாயல் கொண்ட மோடி நாடகங்களும் இருந்துள்ளன. அதே போல் இன்றும் இசைப்பாடல்களும் வசனங்களும் கலந்த சங்கரதாஸ் சுவாமிகளின் பாணி நாடகங்கள் நடத்தக் குழுக்கள் இருக்கின்றன.ஆனால் இவற்றின் தோற்றம் சில நூறாண்டுகளுக்கு முன் என்பதில் ஐயமில்லை.

இவ்வகை நாடகங்கள் எல்லாம் இன்றுள்ள அரங்குகள் போல் அல்லாமல் நிகழுமிடத்தை மட்டுமே உறுதி செய்து கொண்டு நிகழ்ந்துள்ளன எனலாம். நிகழிடத்தின் மூன்று புறங்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கக் கதை, எடுத்துரைப்பதற்கென ஒரு கதாபாத்திரம் வந்து ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல நிகழ்வுகள் நடந்து முடிவதாக அவை அமைந்தன. கட்டியங்காரன் அல்லது விதூஷகன் என்ற கதாபாத்திரம் அமைந்திருக்கும் இந்த வடிவத்தை இந்திய நாடகவடிவம் எனலாம். இந்த வடிவம் தனக்குள் நடன அசைவுகளையும் இசைப்பாடல்களையும் தர்க்கம் சார்ந்த உரையாடல் வடிவத் தையும் முழு இரவுக்குமான நிகழ்வையும் வைத்திருந்தது. வேளாண்மை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுக் களைத்து வரும் மக்களுக்கான ஓய்வுப் பொழுதுக்கலையாகவும் வாழ்க்கைக்கான வழி நடத்தல் கருத்துக்களைத் தரும் கலையாகவும் தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் 19 ஆம் நூற்றாண்டின் மையக் காலம் வரை இருந்து வந்தவை இந்த நாடகங்கள் தான்.நவீனத்துவத்தின் நுழைவு பொதுவாக நவீன கலை இலக்கியம் பற்றிய பேச்சுக்கள் அல்லது சொல்லாடல்கள் பலதளங்களில் விரியக்கூடியன.நவீனக் கலை இலக்கியம் பற்றிய சொல்லாடல் மட்டுமல்ல. நவீன மனிதன் பற்றிய ஒரு சிறு குறிப்பும் விரிவான உரைக்கோவையுமே கூட ஒற்றைப் பரிமாணத்துடன் நிற்பன அல்ல. இங்கே மிகுந்த தன்னுணர்வுடன் உள்வாங்கப்பட்ட நவீன நாடகங்கள் பற்றிய பேச்சும் அதற்கு விலக்கல்ல.பாரம்பரியத்தின் கடுமையான இறுக்கத்தின் மீதும் தடைகளின் மீதும் விமரிசனங்களைப் பரவவிட்ட நவீனத்துவம், நிகழ்கால மனிதனின் இருப்பு, வெளிப்பாடு, மாறவேண்டிய அல்லது மாற்ற வேண்டிய நிலை என ஒவ்வொன்றிலும் தன்னுணர்வுடன் செயல்படுவதை வலியுறுத்தும் நோக்கம் கொண்டது.நவீனத்துவத்திற்கு எனத் தனித்த அடையாளம் கொண்ட தத்துவம், அரசியல், வடிவம், அவற்றைத் தேடும் முறை எனச் சில அக்கறைகள் உண்டு. ஐரோப்பிய நவீனத்துவம் 16,17 ஆம் நூற்றாணடு அறிவியல் மற்றும் தொழில்புரட்சிகளின் விளைவு. இறையியல். தத்துவம், அறிவுத்தோற்றவியல் அல்லது மெய்காண்முறை என எல்லா வற்றிலும் ஐரோப்பிய மனிதனுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள்,குழப்பங்கள், அதற்கு அவன் உருவாக்கிக் கொணட விளக்கங்கள் எனப் பலவும் அதன் பின்னணியில் உண்டு.


இவையனைத்தும் இந்திய நவீனத்துவத்திற்கு உண்டு எனச் சொல்ல முடியாது.ஏனெனில் இந்திய மனிதன், அவன் படைப்பாளியாக இருந்தாலும்சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி நவீனத்துவத்தை அடைந்தது வாழ்வின் ஊடாக அல்ல. கற்ற கல்வியினூடாக மட்டுமே. ஐரோப்பியர்களின் வருகையோடு கூடிய ஆங்கிலக்கல்வியின் ஊடாகவே நவீனத்துவம் அவனுள் நுழைகிறது.ஐரோப்பியர்களின் வருகை, மேற்கத்தியக்கல்வி, அதன்வழியான சிந்தனை மரபு உண்டாக்கிய தாக்கம், அவர்களாகவே -ஐரோப்பியர்களாகவே -மாறிவிடுவதில் இருந்த ஆர்வம் போன்றவை தமிழர்களுக்கு நவீனம் (Modern) என்ற வார்த்தைக்கான கருத்தியல் மற்றும் செயல்பாட்டுத் தளங்களை அர்த்தப் படுத்த முயன்றன. மேற்கத்திய நவீனத்துவம் சிலவகைப் பட்ட புரட்சிகளின் பின்விளைவுகள் என்பதை நாமறிவோம். நெருக்கடிகள் நிரம்பிய போர்க்காலப் பின்னணியும் அதற்கு உண்டு. அதன் காரணமாக தனிமனித விடுதலையை மையமாகக் கொண்டு இறுகிப் போன நிறுவனங்களையும், அவை பாதுகாக்க முயன்ற சமூகப் படித்தரங்களையும், மதிப்பீடுகளையும், கேள்விக்குள்ளாக்குதல் மற்றும் விடை தேடி அலைதல் என்பதை அடையாளமாகக் கொண்டிருந்தது மேற்கத்திய நவீனத்துவம். அத்துடன் நலிவுற்றவர்களுக்கும் பாதிக்கப் பட்டவர்களுக்கும் ஆதரவு என்கிற மனிதாபிமான முகமும் அதற்கு உண்டு.மேற்கத்திய படைப்பாளர்களும் சிந்தனையாளர்களும் நவீனம் என்ற வார்த்தையை உள்வாங்கியதும் உபயோகித்ததும் இத்தகைய கருத்தியல் செயல்பாட்டுத் தளங்களோடுதான். அவர்களின் காலப்பின்னணியும், நெருக்கடிகளும் புதிய புதிய கேள்விகளை முன் வைத்தன; விடைகள் தெரிந்தவை; விடைகள் தெரியாதவை; விடைகளைத் தேட வேண்டியவை; தேடவே முடியாதவை எனப் பல்வேறு கேள்விகள். அவைகள் வெளிப்படுத்திய பல்வேறு விதமான உள்ளடக்கங்கள். அவைகளை வெளிப்படுத்த முடியாமல் திணறிய பழைய வ்டிவங்களுக்குப் பதிலாகப் புதிய வடிவங்கள்; வெளிப்பாட்டு முறைகள் என ஐரோப்பிய நவீனத்துவ நாடக அரங்கம் பரந்த பரப்பினைக் கொண்டதுபுதிய கேள்விகளையும் புதிய பதில்களையும் வெளிக்கொணர யதார்த்த பாணி அரங்கு போதாது என்று உணர்ந்தவர்கள், காவிய பாணி அரங்கு (Epic theatre) , அபத்த நாடகங்கள் ( Absurd Drama), குரூர அரங்கு (Theatre of Cruelty), குறியீட்டியல் (Symbolic) நாடகங்கள, மிகை யதார்த்த நாடகங்கள் ¢(Surrealistic plays), வெளிப்பாட்டியல் (Expressionistic) நாடகங்கள் எனப் புதிய மரபொன்றை உருவாக்கினார்கள். நாடகப் பிரதிகளில் மட்டுமல்லாமல் நிகழ்த்தும் முறையிலும், நடிப்புப் பாணியிலும் கூட இத்தகைய மரபொன்றை மேற்கத்திய மரபில் நாம் காண முடியும். காவிய் பாணி அரங்கு தொடங்கி , கண்ணுக்குப்புலப்படா அரங்கு ( Invisible theatre) வரையிலான நிகழ்த்து முறைகள், ஒன்றின் இடத்தில் இன்னொன்று என நடப்பட்ட பயிர்கள் அல்ல; அவ்வக் காலத் தேவைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தவை. ஆனால் தமிழர்களாகிய நாம் நவீனம் என்பதைப் புதியது எனக் கருத்தியல் ரீதியாகவும் செயல் பாட்டுத் தளத்தில் மனிதாபிமானம் என்பதாகவும் மட்டுமே புரிந்து கொண்டுள்ளோம்.


மேற்கத்திய நவீனத்துவ மரபில் உள்ளவைகளை ஏற்றுக்கொள்வதிலும் கூடப் புதுமைநாட்டம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது எனச் சொல்லலாம். வெளிப்பாடுகள்சென்ற நூற்றாண்டின் - 1970 களின் இறுதிவாக்கில் சிறுபத்திரிகை சார்ந்த அறிவாளிகளால் முன்மொழியப் பட்டு, நாடகப் பிரதிகள், பயிற்சி முகாம்கள், நாடக மேடையேற்றங்கள், நாடகவிழாக்கள், அரசு அகாடமிகளின் ஆதரவு, அந்நிய நிதி நிறுவனங்கள்- பண்பாட்டுத் தூதரகங்களின் உதவி, பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டம் என நவீன நாடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றின் வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பையும் பரிசீலனை செய்தாலே அதன் பரிமாணங்களும் போதாமையும் புரியக் கூடும்.நவீனத்தமிழ் நாடகத்தின் முக்கிய பரிமாணங்கள் ஏற்கனவே அடையாளப் படுத்தப்பட்டு , அவற்றின் இயல்பு களும் நோக்கங்களும் பலராலும் பேசப்பட்டுள்ளன. மக்களை நாடிச் செல்லுதலையும், செலவுகளைக் குறைத்து எளிய வடிவில் நிகழ்த்து முறையைக் கொண்ட தெரு நாடகங்கள் அதன் முழுவீச்சில் இன்று இல்லை. அதன் நீர்த்துப் போன வடிவமாக அறிவொளி நாடகங்கள் நடத்தப்பட்டன.நோக்கங்களைக் கோஷங்களாக மாற்றிப் பார்வையாளர்களிடம் நேரடியாகச் செய்திகளைச் சொல்லிவிடத்துடிக்கும் நோக்கம் கொண்டவை அவை.தெரு நாடகங்கள் அல்லது எளிய அரங்கு என்பனவற்றின் மீது இத்தகைய விமரிசனங்களை வைக்கும் இன்னொரு நாடகத்தயாரிப்புகளும் உள்ளன . பல பத்தாயிரங்களையோ லட்சங்களையோ தயாரிப்புச் செலவுகளாகக் கொண்டவை. அவை சங்கீத நாடக அகாடமி, தேசிய நாடகப்பள்ளி போன்ற அரசு நிறுவனங்களி டமிருந்தும், , ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், ப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளின் பண்பாட்டுத் தூதரகங்களிடமிருந்தும் நிதியுதவியைப் பெற்றவை. சோதனை , பரிசோதனை-மேலும் சோதனை என்பதையே நோக்கமாகக் கொண்ட நாடகத் தயாரிப்புகளில் ஈடுபட்ட கூத்துப் பட்டறையின் நாடகங்கள் இப்போக்கிற்குச் சரியான உதாரணங்கள். பின்னரங்கச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மேடையில் காட்சி ரூபங்களில் திளைக்கச் செய்யும் இத்தகைய நாடகங்களில் வடிவத்தேடல்கள் அதிகம் உண்டு.


மேற்கத்தியப் புதுமைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தல், இந்திய அரங்கை- பாரம்பரிய அரங்கை உருவாக்குதல்- தமிழ்த் தேசிய இன அடையாளங் களை வெளிப்படுத்தும் அரங்கத்தை அடையாளப்படுத்துதல் என்று சில நுட்பமான வேறுபாடுகள் அவற்றிற் கிடையே உண்டு. ஆனால் இவையனைத்தும் பார்வையாளர்களோடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய உறவில் ஒன்றுபடுகின்றன. மிகக் குறைவான -தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களிடம் மட்டுமே இந்நாடகங்களின் உறவு உள்ளது. அவ்வுறவும் கூடப் பார்வையாளன் -மேடைப்படைப்பு என்பதான உறவாக இல்லை. பார்வை யாளப் படைப்பாளிகளின்- அறிவார்ந்த விமரிசனத்திற்கு இடமளிக்கக் கூடிய படைப்பாக இருக்க அவை முனைகின்றன.
பார்வையாளர்களின் வருகையை விடவும் பத்திரிகைகளின் விமரிசனங்களே போதும் என்ற திருப்தி இத்தகைய நாடகத்தயாரிப்புகளில் ஈடுபடுகிறவர்களுக்கு உண்டுநவீனத்தமிழ் நாடகங்கள் என்பதற்குள் செயல்படும் இத்தகைய போக்குகள் நாடகம் என்ற சக்தி வாய்ந்த கலை ஊடகத்தின் செயல்பாடுகளையே கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் மாற்றியுள்ளன. ரசனை நிலையிலோ, காத்திரமான சமூகநிகழ்விலோ கூட இந்நாடகங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது உண்டாக்கிய பாதிப்புக்கள் மிகமிகக் குறைவு; எதுவும் இல்லை என்று கூடச் சொல்லலாம். இதனை நாடகச் செயல்பாடுகளின் பரப்பிற்கு வெளியே இருந்து சொல்கின்ற ஒரு குற்றச்சாட்டாக நினைக்க வேண்டியதில்லை. தெரு நாடகங்களின் சமூகச் செயல்பாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு, அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்ட குழுக்களோடு இணைந்து வேலை செய்தும், சங்கீத நாடக அகாடமியின் நிதி உதவியோடும், பல்கலைக்கழக நாடகத் தயாரிப்பாகவும் செய்யப்பட்ட சோதனை முயற்சிகளிலும் முழு மனத்தோடு ஈடுபட்டவன் என்ற நிலையிலும் இப்படிச் சொல்லத் தோன்றுகிறது.சரியான அர்த்தத்தில் நவீன நாடகம் தமிழுக்கு அறிமுகம் ஆகியிருந்தால்,அதன் முதன்மையான மையம சாதி அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் ஒன்றாகவே இருந்திருக்கும்.
மராத்தியிலும் கன்னடத்திலும் , ஆந்திரத்திலும் முக்கியமான நாடக ஆசிரியர்களாகக் கருதப்படுகிறவர்களின் நாடகங்கள் சாதியமைப்பிற்கு எதிராகவே இருந்தன. விஜய் டெண்டுல்கரின் காசிராம் ஹோட்வால், கன்யாதான் (மராத்தி) கிரிஷ் கர்னாடின் பலிபீடம், சந்திரசேகர கம்பாரின் ஜோ.குமாரசாமி (கன்னடம்) அட்லி கிருஷ்ணாராவின் தூர்புரேகலு (தெலுங்கு) போன்ற நாடகங்கள் சாதிப் பிரச்சினையைப் பேசியுள்ள நாடகங்கள். ஆனால் தமிழில் அத்தகைய நவீன நாடகப் பிரதிகளை எண்ணுவதற்கு ஒரு விரலைக் கூட மடக்க வேண்டியதில்லை. பிராமண அழகியல்xபறைச்சேரி அழகியல் எனச் சாதிப் பிரச்சினையின் முகத்தைக் காட்டிய இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதையைத் தாண்டி வந்தால் கே.ஏ.குணசேகரனின் பலி ஆடுகள் தான் சாதிப் பிரச்சினையின் குரூர வடிவங்களை முன்வைத்த நாடகம்.


பெரும்பான்மை மக்களின் பண்பாடு என்ற போர்வையில் தனது கருத்தியல் வன்முறையைத் தக்க வைப்பதற்கேற்ற வடிவத்தைப் பெற்றுள்ள வைதீக இந்துமதமும் அதன் கருத்துக்களும் இங்கு விமரிசிக்கப்படவே இல்லை. இந்து மத அடிப்படைவாதம் என்றில்லை. எந்த மத அடிப்படை வாதத்தையும் சாதி அடிப்படை வாதத்தையும் தமிழ்ன் நவீன நாடகங்கள் விமரிசனத்திற்குரிய ஒன்றாக நினைத்ததே இல்லை. கூர்ந்து கவனித்தால் அவற்றைக் கேள்விக் குள்ளாக்குவதை விடவும் அதனோடு சமரசம் செய்து கொண்டவை களும்,அதன் தாத்ப்ரியங்களில் பிரியம் கொண்டு மூழ்கித் திளைத் தவைகளும் தான் நவீன நாடகங்களாக- நவீனப் படைப்புகளாக முன்வைக்கப்படுகின்றன. அவைகளுக்கே பத்திரிகை களின் அங்கீகாரம் கிடைக்கின்றன. தேசிய, சர்வதேசிய அறிமுகங்கள் கிடைக்கின்றன. அங்கீகாரத்துக்கும் , ஆதரவிற்கும் ஏங்கும் தனிமனித மனம் சமரசப் பட்டு அதிகாரத்துவ வலைக்குள் விழுந்து விடுகிறது. தமிழ் நாடகவரலாற்றில் பல்வேறு உதாரணங்களைச் சொல்ல முடியும்.நாடகங்கள்- நாடகக் குழுக்கள் எப்பொழுதெலலாம் தீவிரப்பட்டு வெகுமக்கள் வடிவமாக மாறுகின்றனவோ அப்பொழுதெல்லாம் திசை திருப்புதலின் பின்னணியில் ஆதிக்கக் கருத்தியல் செயல் பட்டுள்ளது. இந்தியாவில்/ தமிழ்நாட்டில் ஆதிக்கக் கருத்தியல் என்பது படிநிலை அமைப்பில் தனது அதிகாரத்தைத் தக்கவைக்கும் பிராமணியம் என்பதைத் தான் குறிக்கும்.திராவிட முன்னேற்றக்கழகத்தவரின் நாடகங்கள் கோயில், கோயில் சார்ந்த பிராமணர்கள், பிராமணிய மதிப்பீடுகள் ஆகியவற்றின் மீது காத்திரமான விமரிசனங்களை முன் வைத்தவை. ஆனால் அவற்றை அங்கீகரிக்க மறுத்த குரல்கள் சிறுபத்திரிகைகளின் நவீனத்துவம் (?) சார்ந்த பிராமணீயக் குரல்கள் தான்.



ஐரோப்பிய யதார்த்தபாணி நாடகங்களின் வடிவச் செழுமையோடு திருப்பங்களும் கொண்டதாக சி. என். அண்ணாதுரை, மு,கருணாநிதி, எம். ஆர். ராதா போன்றவர்களின் நாடகப்பிரதிகள் உள்ளன. சமூக விமரிசனத்தை நவீனமாகக் கருதாமல் ஐரோப்பிய இந்திய மாதிரிகளை முன்வைத்து எழுதப்பட்ட ந.முத்து சாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் நாடகங்களே நவீன நாடகங்கள் என முன் மொழியப் பட்டதில் - முன்மொழியும்படி செய்யப்பட்டதில் செயல் பட்டதும் பிராமணிய மதிப்பீடுகள்தான். உரையாடல்களின் பலத்தில் வெகுமக்களிடம் எளிமையான புரிதல்களை உண்டாக்கிய திராவிட இயக்க நாடகமரபு தடை பட்டுப் போனதில் ஆதிக்கக் கருத்தியலாளர்களும் அதன் சார்பு நிறுவனங்களும் திருப்தியடைந்தன. அதே நேரத்தில் அத்தகைய நாடகங்களை எழுதி மேடையேற்றிய திராவிட இயக்கத்தினரும் அதன் படைப்பாளி களும் செயலாளிகளும் அதிகார மையத்திற்குள் நுழைந்தவுடன் அதன் சுழிப்பிற் கேற்பத் தங்களைத் தகவ மைத்துக் கொண்டு தங்களின் பயண ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார்கள் என்பதும் தான் உண்மை.திராவிட இயக்க நாடகமரபையொத்த காத்திரமான தாக்கத்தை உண்டு பண்ணும் இயல்போடு உருவானவை தெரு நாடக முயற்சிகள். பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்க அறிமுகத்தோடு எழுபதுகளின் இறுதியாண்டு களிலும் எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளிலும் நகரங்கள், சிறு நகரங்கள் எனப்பல இடங்களில் நாடகக் குழுக்கள் தோன்றின. அவற்றின் செயல்பாடுகளில் தேக்கத்தை உண்டு பண்ணவும் போக்கைத்திசை திருப்பவும் வந்தது போல அறிமுகமானது இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் இளம் இயக்குநர்கள் ஊக்குவிப்புத் திட்டம். சுயேச்சையான நாடகக்குழுக்களாக - சமூக விமரிசனம் சார்ந்த நாடகங்கள் செய்பவர் களாக - ஆதிக்கக் கருத்தியலோடு உடன்பட மறுக்கிறவர்களாக உருவானவர்களை- உருவாக வேண்டிய வர்களை, வேர்களைத் தேடும் நாடகக் குழுக்களாக - பாரம்பரியத்தில் பெருமிதங் கொள்ளும் நாடகக் கலைஞர் களாக, தேசிய அடையாளம் கொண்ட நாடக உருவாக்கத்திற்குப் பங்களிப்புச் செய்பவர்¢களாக மாற்றிக் கட்டமைத்தது அந்த ஊக்குவிப்புத் திட்டம்.


சங்கீத நாடக அகாடமியின் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் , அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய அரங்கின் அரங்க மொழியைக் கண்டறிந்து, அதனூடாக நாடகப் பிரதியை மேடை
யேற்றிட வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தது. இந்த நிர்ப்பந்தத்தினை ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளடக்கத்தில் செயல்பட வேண்டிய நவீனத்தின் செயல்தளம் பின் தங்கியது. இந்திய அதிகாரத்துவக் கருத்தியலின் வாகனமான புராண இதிகாசங்களின் கதைக் கூறுகள் புதிய அரங்க மொழியில் மறுவிளக்கம் செய்யப்பட்டன. அக்கருத்தியலோடு மோதி உள்வாங்கப் பட்டு அதன் சாயலோடு விளங்கிய நாட்டார் கதைகள் புதுவகைப் பிரதிகளாக்கப்பட்டன. சமகால மனிதர்களின் உடைகளோ , ஒப்பனைகளோ நாடகமேடைக்கு அந்நியமான வைகள் என ஒதுக்கப்பட்டன். ஆனால் அதன் பார்வையாளர்களோ கிராமங்களிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்து நகர வாசிகளாக மாறியிருந்த தமிழர்கள் அல்லது இந்தியர்கள். அவர்களிலிருந்து ஒரு சிறு கூட்டம் புதுமையை விரும்பும் - ஆதரித்துவிடும்- மனநிலையோடு பார்வையாளர்களாக ஆனார்கள்.

1984 முதல் 1994 வரை பத்தாண்டுகாலம் செயல்பட்ட சங்கீத நாடக அகாடமியின் இளம் இயக்குநர்கள் திட்டம் நாடகக் கலைஞர்களை- நாடகத்துறை சார்ந்து சமூக அக்கறையை வெளிப்படுத்த நினைத்தவர்களை, அங்கீகாரத்திற்கு அலைபவர்களாகவும் தேசிய அளவில் அறிமுகம் தேடுபவர்களாகவும் , மிகுதியான பணச்செலவில் மேடைப் பிருமாண்டம் ஒன்றைச் செய்துவிடும் கனவுகள் நிரம்பியவர்களாகவும் மாற்றிவிட்டு நின்று போனது. 1994-க்குப் பின் அகாடமியின் நிதியுதவியும் நாடகவிழாக்களும் நின்றுபோன நிலையில் நவீன நாடகக் குழுக்கள் செயல்பாடற்றனவாகச் சிதறுண்டு நின்றன.அதுவே அதிகார மையத்தின் நோக்கமாகக் கூட இருக்கலாம்.[ பட்டியல் இணைப்பில் தரப்பட்டுள்ளது]
இளம் இயக்குநர் திட்டத்தினைக் கைவிட்ட மைய சங்கீத நாடக அகாடமி 1995 -இல் வேறு ஒரு திட்டத்துடன் களமிறங்கியது. இளம் நாடகாசிரியர்களின் உருவாக்கம் என்னும் திட்டம் முதன் முதலில் தமிழில் தான் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் மலைச்சாமி எழுதிய முனி என்ற நாடகமும் தேவி பாரதி எழுதிய மூன்றாவது விலாஎலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும் என்ற இரு நாடகங்களும் தேர்வு பெற்றன. அவ்விரு நாடகங்களையும் இயக்கும் இயக்குநர்களாக மு.இராமசுவாமியும் ரா.ராசுவும் நியமிக்கப்பட ,ஒரு மாத காலம் ஒத்திகைகளும் நடந்தன.ஆனால் இயக்குநர்Xநாடகாசிரியன் என்ற முரண்பாட்டின் வெளிப் பாடாக அவ்விரு பட்டறைகளும் அமைந்து போக அத்திட்டத்தை அகாடமி கைவிட்டது.மைய சங்கீத நாடக அகாடமியின் இளம் இயக்குநர் திட்டமும் , அதன் தொடர்ச்சியான இந்தியத்தனம் நிரம்பிய நாடகப் பிரதிகளுக்கான தேடலும் உண்டாக்கிய மாற்றத்தைக் குறிக்க ,’ ஓரடி முன்னால் ஈரடி பின்னால் ‘ என்ற புகழ்பெற்ற வாக்கியத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன். கதாபாத்திரங்களை முன்னிறுத்தி ,அவர்களின் செயல்பாடுகளின் மூலம் முரண்களை அடையாளப் படுத்திய இந்நாடகப் பிர்திகள் , நவீனத்துவத்தின் மீதான அபரிதமிதான விருப்பத்தைக் கைவிட்டன. அத்தோடு மேடையேற்றத்தின் போது நிரப்பப்பட வேண்டிய இடைவெளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. பாரம்பரியக் கலைகளின் அசைவுக் கூறுகளையும் சடங்குகள் சார்ந்த வினைகளையும் கொண்டு அந்த இடைவெளிகள் நிரப்பப்பட்டு மேடையேற்றத்திலேயே அப்பிரதிகள் முழுமையடைந்தன.
இந்தப் பிரதிகளின் வரவோடு தமிழ் அறிவுலகச் சொல்லாடல்களாக அமைப்பியல், குறியியல் , நேர்கோடற்ற கதையாடல், பின் நவீனத்துவம் போன்றனவும் வந்திருந்தன என்ப தையும் நினைவில் கொண்டு வர வேண்டும்.குறியீட்டு அம்சங்கள் கொண்ட அரஙக அமைப்பு , உடை, ஒப்பனை, ஒளியமைப்பு போன்றவற்றைத் தவிர்க்கவியலாத அம்சங்களாகத் தவிர்க்கவியலாத அம்சங் களாக்கின இந்நாடகங்கள்.மொத்தத்தில் பார்வையாளர்களைத்தேடிச் சென்ற அரங்கை நிகழ்வைத் திரும்பவும் ப்ரொஷீனிய அரங்கின் வெளிச்ச ஜோடனைகளுக்குள்ளும் சமயச் சடங்குகளின் அசைவுகள் என்னும் அழகியலுக்குள்ளும் கொண்டுபோய்ச் சேர்த்தன நவீனத்தின் பரவலும் விமரிசன மனோநிலையில் தாக்கமும் தடுத்து நிறுத்தப்பட்ட நிலை-சிதறுண்ட நிலை நாடகத்தில் மட்டுமே நடந்துவிட்டது என்பதாக தோன்றவில்லை, எல்லா விதமான நவீன படைப்புகளிலும்¢ சிந்தனைகளிலும் இச்சிதறடிப்பைக் காட்ட முடியும் என்றே தோன்றுகிறது. சாதியமைப்பைக் கேள்விக்குள்ளாக்கு வனவாக தொடக்கம் கொண்டிருக்க வேண்டிய நவீனத்துவத்தின் கீற்றுக்களைப் பாரம்பரியத் தேடல்களுக்குள் நுழையச் செய்ததில் முதன்மையான தடைக்கல் சாதி அமைப்புதான் என்பது உணரப்படாமல் போனதில் உள்ள அரசியல் இன்னும் உணரப் பட்டதாகத் தெரியவில்லை.1990- களின் மத்தியில் பேச்சுக்களாக மாறியுள்ள தலித் என்னும் தனித்துவம் அரங்கவியலுக்குள்ளும் புகுந்துள்ளது. இத்தனித்துவம் சாராம்சத்தில் படைப்பின் -எழுத்தின் - மையத்தை பார்வையாளர்களிடம் நகர்த்தும் நோக்கம் கொண்டது.இந்நோக்கத்தோடு அத்தனித்துவம் நாடகப்பிரதியில் புதிய சுவடுகள் எதையும் பதிக்கவில்லை. இடைவெளிகள் கொண்ட எழுத்து, கதைசொல்லும் மரபு , நடப்பியல் பாணி என்று ஏற்கனவே உள்ள ஏதாவதொரு வடிவத்தின் நீட்சியாகவே உள்ளன. கே.ஏ. குணசேகரனின் தலித் நாடகங்கள் கதை சொல்லும் பாணியிலானவை. ரவிக்குமாரின் வார்த்தை மிருகம், பிரேமின் பாறையைப் பிளந்து கொண்டு ஆகியன இயக்குநருக்கு அதிகாரமளிக்கும் இடைவெளிகள் கொண்ட பிரதிகள். ஜீவாவின் பிரதிகள் பார்வை யாளர்களிடம் முறையிடும் தொடக்கம், திருப்பம், உச்சம் என்ற நடப்பியல் வடிவங்கள். இவைகள் வெவ்வேறு ரூபத்தில் இருந்தாலும் தலித் பார்வையாளர்களை மட்டும் நோக்கி நீள்வன என்பதில் மாறுபாடுகள் இல்லை.


தமிழ் நவீன நாடகப்பிரதிகளில் அடையாளப்படும் கதைசொல்லல் வடிவம், வடிவச்சீர்மை வடிவம் என்றை இரண்டிலிருந்தும் வேறுபட்ட நாடகப் பிரதிகள் சிலவும் தமிழில் அச்சாகியுள்ளன.ஒருவித நேர்கோடற்ற தன்மையிலும்,நிகழ்வுகளின் போது தொடர்ச்சியற்ற பாங்கும்,மொழியில் இருண்மையின் தூக்கலும் கொண்ட பிரதிகள் அவை.இவ்வம்சங்கள் காரணமாகவே இப்பிரதிகள் மேடையேற்ற வாய்ப்புக்கள் இன்றி அச்சில் மட்டும் உள்ளன. எம்.டி. முத்துக்குமாரசாமியின் சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப்போவதில்லை, குதிரைக் காரன் கதை, பிரேமின் ஆதியிலே மாம்சம் இருந்தது, அமீபாக்களின் காதல், எஸ்.ராம கிருஷ்ணனின் இருநாடகங்கள் முதலியன அத்தகையன நாடகங்கள்.நாடக அரங்கேறத்த்தில் தொடர்ந்து செயல்படும் வேலு சரவணனின் குழந்தைகள் நாடகங்கள், முருகபூபதியின் சோதனை முயற்சிகள் போன்றவற்றிலும் இந்த தொடர்ச்சியற்ற தன்மைகள் உண்டு.

நான் படித்தவற்றை தெரிந்துகொள்வதற்காக கொடுத்துள்ளேன்..

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து நடப்போம் ......

Tuesday, June 29, 2010

தலைமை நீதிபதி

தமிழகத் தலைமை நீதிபதிஅல்லது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[1] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.



உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணையில்

மாவட்ட நீதிபதி
சார்பு நீதிபதி
மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.


குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகள்

செசன்சு நீதிபதி
தலைமை நீதிமுறைமை நடுவர்
உதவி செசன்சு நீதிபதி
நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் இந்தியாவின் மாநிலமானத் தமிழத்தின் உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மற்றும் தற்பொழுதயத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[1] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.


நீதிபதிகள் பதவி வகித்த காலம்
சர் தாமஸ் ஆன்டுரு லுமிஸ்தன் ஸ்ட்ரேஞ்ச் 1801-1816
சர் ஜான் என்றி நியூபோல்ட் 1816-1820
சர் எட்மன்ட் ஸ்டேன்லி 1820-1825
சர் ரால்ப் பால்மர் 1825-1835
சர் ராபர்ட் பக்லே கோமின் 1835-1842
சர் எட்வர்ட் ஜான் காம்பியர் 1842-1850
சர் கிரிஸ்டோபர் ராவ்லின்சன் 1850-1859
சர் என்றி டேவிட்சன் 1859-1860
சர் கொல்லே எர்மன் ஸ்காட்லேன்ட் 1860-1871
சர் வால்டர் மோர்கன் 1871-1879
சர் சார்லஸ் ஆர்தர் டர்னர் 1879-1885
சர் ஆர்தர் ஜான் ஹேமன்ட் கொலின்ஸ் கியூ சி 1885-1899
சர் சார்லஸ் அர்னால்ட் ஒயிட் 1899-1914
சர் ஜான் எட்வர்ட் பவர் வாலிஸ், பி சி 1914-1921
சர் வால்டர் ஜார்ஜ் சாலிஸ் ஷிவாப். கே சி 1921-1924
சர் முர்ரே கோர்ட்ஸ் டிரேட்டர் 1924-1929
சர் ஹோரேஸ் ஒவன் காம்டன் பிஸ்லே 1929-1937
சர் ஆல்பிரட் என்றி லியோனல் லீச் 1937-1947
சர் பிரட்ரிக் வில்லியம் ஜென்டில் 1947-1948
சர் பக்காலா வெங்கட்ட ராஜமன்னார் 1948-1961
சர் சுப்ரமண்ய ராமச்சந்திர ஐயர் 10-05-1961
சர் பாலகனி சந்திர ரெட்டி 23-11-1964
மாதவ அனந்தநாராயணன் 01-07-1966
குப்புசாமி நாயுடு வீராசாமி 01-05-1969
பாலப்பட்டி சதய கஙுண்டர் கைலாசம் 08-04-1976
பத்மநாப்பிள்ளை கோவிந்தன் நாயர் 03-01-1977
தயி ராம்பிராசாத ராவ் 29-05-1978
முகம்மத் காசிம் முகம்மத் இஸ்மாயில் 06-11-1979
கிருஷ்ண பல்லப் நாரயண் சிங் 12-03-1982
மதுக்கர் நர்கர் சந்துருக்கர் 02-04-1984
சண்முகசுந்தர மோகன் 19-10-1989
ஆதர்ஷ் செயின் ஆனந்த் 01-11-1989
கந்த குமாரி பட்நாகர் 15-06-1992
குதாரிகோட்டி ஆன்னதனய சாமி 01-07-1993
முகம்மத் சிங் லிபர்ஹான் 07-07-1997
அசோக் சோட்டிலால் ஆகர்வால் 24-05-1999
நாகேந்திர குமார் ஜெயின் 13-09-2000
பி சுபாஷன் ரெட்டி 12-09-2001
மார்கணைடேய கட்ஜூ 28-11-2004
அஜித் பிராக்காஷ் ஷா


நன்றி மீண்டும் அடிப்படை புரிந்து நடப்போம் ......

Monday, June 28, 2010

துணை முதலமைச்சர்

துணை முதலமைச்சர் (Deputy chief minister):


முதலமைச்சர் பொறுப்பு வரையறுக்கப்பட்டிருக்கும் வேளையில், துணை முதலமைச்சர் பொறுப்பு அவ்வப்பொழுது ஏற்படும் அரசியல் சூழலுக்கேற்ப ஏற்படுத்தப்படுத்தப்படும் விருப்பபொறுப்பு (பதவி) ஆகும். இந்தியாவில் இம்முறையிலேயே இப்பொறுப்பை பல்வேறு மாநிலங்களில் வகிக்கின்றனர். கட்டாயமாக இப்பொறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற விதிகள் இந்தியாவின் மாநிலங்களில் பின்பற்றபடுவதில்லை. பெரும்பாலும் கூட்டணி ஆட்சிகள் அமைகின்ற மாநில ஆட்சிகளில் அக்கூட்டணியில் பங்குபெற்றுள்ள முக்கிய கட்சியினரின் பங்கும், ஆதரவும் இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் ஒரு சில துறைகளுடன் அக்கட்சிக்கு இந்த பொறுப்பு வழங்கபெற்று அதன்மூலம் ஆடசியில் பங்கு வகிக்கின்றனர். முதல்வரின் பணிச்சுமை காரணமாகவும் துறைகள் பிரித்து கொடுப்பதற்காகவும் இப்பொறுப்பு முதல்வரால் சிலசமயங்களில் ஏற்படுத்தப்படும்.

60 ஆண்டு காலமாக இல்லாத புதுபதவி இந்த துணை முதலமைச்சர் பதவி ஏன்? எதற்காக?.


நன்றி மீண்டும் அடிப்படை புரிந்து நடப்போம் சிந்திப்போம் ........

முதலமைச்சர்

2 வதாக முதலமைச்சர் இவரெ மாநிலத்தின் முதல்வர்.

முதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார்.


தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

சென்னை மாகாணம் இன்றைய தமிழ் நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம் 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது . இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று வருடங்களாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.இந்திய அரசு சட்டம், 1935 ன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (The legislative council) எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுகப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது.1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.


1 ஏ. சுப்பராயலு 17 டிசம்பர், 1920 11 ஜூலை, 1921 1 நீதிக்கட்சி[9]
2 பனகல் ராஜா 11 ஜூலை, 1921 3 டிசம்பர், 1926 1 நீதிக்கட்சி[9]
3 பி. சுப்பராயன் 4 டிசம்பர், 1926 27 அக்டோபர், 1930 1 சுயேச்சை[9]
4 பி. முனுசுவாமி நாயுடு 27 அக்டோபர், 1930 4 நவம்பர், 1932 1 நீதிக்கட்சி[9]
5 ராமகிருஷ்ண ரங்காராவ் 5 நவம்பர், 1932 4 ஏப்ரல், 1936 1 நீதிக்கட்சி[9]
6 பி. டி. இராஜன் 4 ஏப்ரல், 1936 24 ஆகஸ்டு, 1936 1 நீதிக்கட்சி[9]
7 ராமகிருஷ்ண ரங்காராவ் 24 ஆகஸ்டு, 1936 1 ஏப்ரல், 1937 2 நீதிக்கட்சி[9]
8 கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு 1 ஏப்ரல், 1937 14 ஜூலை, 1937 1 நீதிக்கட்சி[10]
9 சி. இராஜகோபாலாச்சாரி 14 ஜூலை, 1937 29 அக்டோபர், 1939 1 இந்திய தேசிய காங்கிரஸ்
10 தங்குதுரை பிரகாசம் 30 ஏப்ரல், 1946 23 மார்ச்சு, 1947 1 இந்திய தேசிய காங்கிரஸ்
11 ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 23 மார்ச்சு, 1947 6 ஏப்ரல், 1949 1 இந்திய தேசிய காங்கிரஸ்
12 பூ. ச. குமாரசுவாமி ராஜா 6 ஏப்ரல், 1949 26 ஜனவரி, 1950 1 இந்திய தேசிய காங்கிரஸ்

சென்னை மாநிலம், தற்போதைய தமிழ் நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-ல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ந் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.


1 பி. எஸ். குமாரசுவாமிராஜா 26 ஜனவரி, 1950 9 ஏப்ரல், 1952 1 இந்திய தேசிய காங்கிரஸ்
2 சி. இராஜகோபாலாச்சாரி 10 ஏப்ரல், 1952 13 ஏப்ரல், 1954 2 இந்திய தேசிய காங்கிரஸ்
3 கே. காமராஜ் 13 ஏப்ரல், 1954 31 மார்ச்சு, 1957 1 இந்திய தேசிய காங்கிரஸ்
4 கே. காமராஜ் 13 ஏப்ரல், 1957 1 மார்ச்சு, 1962 2 இந்திய தேசிய காங்கிரஸ்
5 கே. காமராஜ் 15 மார்ச்சு, 1962 2 அக்டோபர், 1963 3 இந்திய தேசிய காங்கிரஸ்
6 எம். பக்தவத்சலம் 2 அக்டோபர், 1963 6 மார்ச்சு, 1967 1 இந்திய தேசிய காங்கிரஸ்
7 சி. என். அண்ணாத்துரை 6 மார்ச்சு, 1967 ஆகஸ்டு, 1968 1 தி.மு.க.

சென்னை மாகாணம் - 14 ஜனவரி 1967 அன்று தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மாணம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர்மீது உள்ளவரை நீளூம். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முதலமைச்சராக உள்ள ஒருவர் இரப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மாணம் கொண்டுவரும்படி கெட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பாண்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெரும்வரை இடைக்கால பொருப்பாட்சி அமையும் நிலை எற்படும்.

1. சி. என். அண்ணாத்துரை ஆகஸ்டு, 1968 3 பிப்ரவரி, 1969 1 தி.மு.க.
2 .நாவலர் நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)[12] 3 பிப்ரவரி, 1969 10 பிப்ரவரி, 1969 1 தி.மு.க.
3 மு. கருணாநிதி 10 பிப்ரவரி, 1969 4 ஜனவரி, 1971 1 தி.மு.க.
4 மு. கருணாநிதி 15 மார்ச்சு, 1971 31 ஜனவரி, 1976 2 தி.மு.க.
குடியரசுத் தலைவராட்சி[12] 31 ஜனவரி, 1976 30 ஜூன், 1977
5 எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980 1 அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி 17 பிப்ரவரி, 1980 9 ஜூன், 1980
6 எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984 2 அ.இ.அ.தி.மு.க.
7 எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987 3 அ.இ.அ.தி.மு.க.
8 நாவலர் நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)[12] 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988 1 தி.மு.க.
9 ஜானகி இராமச்சந்திரன் 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி 30 ஜனவரி, 1988 27 ஜனவரி, 1989
10 மு. கருணாநிதி 27 ஜனவரி, 1989 30 ஜனவரி, 1991 3 தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி 30 ஜனவரி, 1991 24 ஜூன், 1991
11 ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996 1 அ.இ.அ.தி.மு.க.
12 மு. கருணாநிதி 13 மே, 1996 13 மே, 2001 4 தி.மு.க.
11 ஜெ. ஜெயலலிதா[14] 14 மே, 2001 21 செப்டம்பர், 2001 2 அ.இ.அ.தி.மு.க.
12 ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002 1 அ.இ.அ.தி.மு.க.
13 ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006 3[14] அ.இ.அ.தி.மு.க.
14 மு. கருணாநிதி 13 மே, 2006 பதவியில் உள்ளார் 5 தி.மு.க.


இதுவே போட்டி ,சுயநலம் காரணமாகக் பல காலம் கழித்துவிட்டோம்,நல்ல முதலமைச்சருக்கான தேடலுக்காக காத்திருப்போம்..,இன்னும் பல 100 ஆண்டு காலம் சிந்தித்துகொண்டே இருப்போம்....,,



இது உண்மைத்தமிழன் வலைபதிவில் நான் படித்ததை அப்படியே தந்து இருக்கிறேன்.

இப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்..!

12-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று தற்செயலாக நான் படிக்க நேர்ந்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

இதுதான் அந்தச் செய்தி..

1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன.சொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “அங்கே நிற்க வேண்டாம்.. அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை..” என்று பலரும் அவரைப் பயமுறுத்தினார்கள். “நீங்கள் விருதுநகர்க்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் உசிதம்..” என்றனர்.
தலைவர் அவர்களது விவாதத்தை மறுத்துவிட்டார். “நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்கிறதுதான் நியாயம்..” என்று கூறிவிட்டார்.தேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளிலெல்லாம்கூட உட்கார்ந்து மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக வந்தார். அந்த ஜீப்பில் அவரோடு நான் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பேன். அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் என்னிடம் அன்பாயிருப்பார் தலைவர். "கிருஷ்ணன் ஏறிட்டானா?" என்று கேட்ட பிறகே காரை எடுக்கச் சொல்வார். அந்தக் காரில் பெரும்பாலும் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை இருப்பார். இவர் காமராஜரின் மிக நெருங்கிய நண்பர்.

ஒரு நாள் பகல் பொழுது.. உச்சிவேளை.. திறந்த ஜீப்பில் தலைவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் ஜீப் குலுங்கியபோது மேலிருந்த கம்பி குத்தியதில் பின்னால் இருந்த என் தலையில் அடிபட்ட ரத்தம் கொட்டியது.தலைவரின் பிரச்சாரம் தடைபட்டுவிடக் கூடாதே என்னும் கவலையில் நான் சமாளித்துக் கொண்டு ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வழி நெடுக கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு வந்த தலைவர், ஒரு கட்டத்தில் என் தலையில் இருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டார்."டேய் என்னாச்சு உனக்கு..? என்னது ரத்தம்?" என்று அதிர்ந்து போய் கேட்டார். "ஒண்ணுமில்லய்யா.. ஒண்ணுமில்ல.." என்றேன். "என்னா ஒண்ணுமில்லன்றேன்..? இவ்வளவு ரத்தம் கொட்டுது.. மூளையிருக்கா உனக்கு..? என்ன அண்ணாமலை நீயுமா பார்த்துக்கிட்டு வர்ற..? நிறுத்து காரை.. உடனே இவனை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போ.." என்று சத்தம் போட்டார்.எங்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மருத்துவமனையில் எனக்குத் தலையில் கட்டுப் போட்டு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர். குடியாத்தத்தில் தலைவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தனர். அந்த வீட்டில் என்னை ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அண்ணாமலைப் பிள்ளை மீண்டும் தலைவரிடம் போய்விட்டார்.அன்று பகல் முழுக்கப் பிரச்சாரத்தில் இடையிடையே அடிக்கடி என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தாராம் தலைவர். "அண்ணாமலை.. கிருஷ்ணனுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுனியா..? மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தியா..?" என்று திரும்பத் திரும்பக் கேட்டாராம்.

இரவு பதினோறு மணியிருக்கும். தலைவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். நான் வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் காற்றுக்காகக் கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்திருந்தேன். நஏராக என்னிடம் வந்தார் தலைவர். என் தோள் மீது கையை வைத்து மிகுந்த வாஞ்சாயோடு, "என்ன கிருஷ்ணா.. இப்போ வலி எப்படியிருக்கு..? சாப்பிட்டியா..?" என்று விசாரித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் போனார்.கட்சிக்காரர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லியனுப்பிவிட்டு பன்னிரெண்டு மணி அளவில் படுக்கப் போனார் தலைவர். நானும் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.நல்ல தூக்கத்தில் இருந்தபோது என்னை, "டேய் கிருஷ்ணா.. எந்திரி.. எந்திரி.." என்று என்னைத் தட்டி எழுப்பினார் தலைவர். தலைவரின் குரல் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். "வானம் என்னமா மின்னிக்கிட்டிருக்கு..? பயங்கரமா இடி இடிக்குது.. மழை கொட்டப் போகுதுன்னேன்.. பிடி.. பிடி.. கட்டிலை அந்தப் பக்கம் பிடி.. உள்ள வந்து படு.. வா.." என்று பரபரப்போடு சொன்னபடியே நான் படுத்திருந்த கட்டிலின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தூக்கப் போனார்.

நான் ஆடிப் போனேன். "ஐயா நீங்க அதெல்லாம் செய்யக் கூடாதுய்யா.. நான் தூக்கிட்டு வரேன்.. நீங்க போங்கய்யா.." என்று பதறினேன். "டேய் கிறுக்கா.. மழை வந்துக்கிட்டிருக்கு.. உனக்கு ஏற்கெனவே தலைல அடிபட்டிருக்கு.. ஈரம் பட்டுச்சுன்னா ரொம்ப ஓபத்திரவமாயிரும். மொதல்ல கட்டிலைப் பிடிண்ணே.." என்று என்னை அதட்டினார்.. வேறு வழியில்லாமல் அவரும், நானுமாய்க் கட்டிலைப் பிடித்து உள்ளே கொண்டு வந்து போட்டோம்.

நான் உள்ளே வந்து படுப்பதற்கும், மழை பெய்வதற்கும் மிகச் சரியாயிருந்தது. தலைவர் உரிய நேரத்தில் என்னை வந்து உள்ளே அழைத்திருக்காவிட்டால், நான் நனைந்திருப்பேன். இது பெரிய விஷயமில்லை.. வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டுக்கூட என்னை உள்ளே அழைத்து வரச் சொல்லியிருக்கலாம்.. ஒரு முதலமைச்சரே வந்து எனக்காக கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனதை, இப்போது நினைத்தாலும் என் உடம்பு புல்லரிக்கிறது.

அந்த மகத்தான தலைவரின் அவ்வளவு பெரிய அன்புக்கு நான் பாத்திரமானது என் முன்னோர் செய்த புண்ணியம். ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டால்கூட தலைகால் புரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் காமராஜர் ஒரு தெய்வம். அந்தத் தெய்வத்தோடு 36 ஆண்டுகள் இருக்கக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

- சொன்னவர் திரு.ஆர்.கிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி


நன்றி மீண்டும் காலத்தை கழித்துப்போம்.....?

ஆளுநர்

ஆளுநரே தமிழ்நாட்டில் மூத்த குடிமகன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946 ல் இருந்தே நியமனம்
செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்பொழுதுள்ளத் தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.தமிழக ஆளுநர் தென் இந்தியாவின் மாநிலமான தமிழ் நாடு மாநிலத்தில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

மதராஸ் இராஜதானி, மதராஸ் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் (புனித ஜார்ஜ் கோட்டை) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.இப்பொழுதுள்ள தமிழ்நாடு, மலபார் பிராந்தியமான வட கேரளம் , கடற்கரைப் பிராந்தியம் மற்றும் ராயலசீமா பிராந்தியமான ஆந்திரப் பிரதேசம் மற்றும் பெல்லாரி, தக்சன கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.
மதராஸ் இராஜதானி 1653 ல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மானிக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின் , மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ் நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளம் ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.[3]


பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு காலவரை
1 ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை 6 மே 1946 7 செப்டம்பர் 1948 1
2 கிருஷ்ண காமாரசிங் பவ சிங் 7 செப்டம்பர் 1948 12 மார்ச் 1952 1
3 ஸ்ரீ பிரகாசா 12 மார்ச் 1952 10 டிசம்பர் 1956 1
4 ஏ.ஜெ. ஜான் 10 டிசம்பர் 1956 30 செப்டம்பர் 1958 1
5 பகாலா வெங்கட்ட ராஜமன்னார் (தற்காலிகம்) 1 அக்டோபர் 1958 24 ஜனவரி 1958 1
6 பிஷ்ணுராம் மெதி 24 ஜனவரி 1958 4 மே 1964 1
7 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் 4 மே 1964 24 நவம்பர் 1964 1
8 பி. சந்திர ரெட்டி (தற்காலிகம்)[4] 24 நவம்பர் 1964 7 டிசம்பர் 1965 1
9 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்[nb 2] 7 டிசம்பர் 1965 28 ஜூன் 1966 1
10 சர்தார் உஜ்ஜல் சிங் (தற்காலிகமாக 16 ஜூன் 1967 வரை) 28 ஜூன் 1966 14 ஜனவரி 1969




மதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969,[2] அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.




# பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு காலவரை[nb 1]
1 சர்தார் உஜ்ஜல் சிங் 14 ஜனவரி 1969 27 மே 1971 1
2 கோடர்தாஸ் கைலாஷ் ஷா (கே. கே. ஷா) 27 மே 1971 16 ஜூன் 1976 1
3 மோகன் லால் சுகாதியா 16 ஜூன் 1976 8 ஏப்ரல் 1977 1
4 பி. கோவிந்தன் நாயர் (தற்காலிகம்)[5] 9 ஏப்ரல் 1977 27 ஏப்ரல் 1977 1
5 பிரபுதாஸ் பட்வாரி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1980 1
6 எம். எம். இஸ்மாயில் (தற்காலிகம்) 27 அக்டோபர் 1980 4 நவம்பர் 1980 1
7 ஸ்ரீ சாதிக் அலி 4 நவம்பர் 1980 3 செப்டம்பர் 1982 1
8 [[சந்தர் லால் குரானா (எஸ்.எல். குரானா) 3 செப்டம்பர் 1982 17 பெப்ரவரி 1988 1
9 பி. சி. அலெக்சாண்டர் 17 பெப்ரவரி 1988 24 மே 1990 1
10 சுர்ஜித் சிங் பர்னாலா 24 மே 1990 15 பெப்ரவரி 1991 1
11 பீஷ்ம நாராயண் சிங் 15 பெப்ரவரி 1991 31 மே 1993 1
12 எம். சென்னா ரெட்டி 31 மே 1993 2 டிசம்பர் 1996 1
13 கிரிஷன் காந்த் (தற்காலிகம்)[5] 2 டிசம்பர் 1996 25 ஜனவரி 1997 1
14 எம். பாத்திமா பீவி 25 ஜனவரி 1997 3 ஜூலை 2001 1
15 சி. ரங்கராஜன் (தற்காலிகம்) 3 ஜூலை 2001 18 ஜனவரி 2002 1
16 பி.எஸ். ராம்மோகன் ராவ் 18 ஜனவரி 2002 3 நவம்பர் 2004 1
17 சுர்ஜித் சிங் பர்னாலா 3 நவம்பர் 2004 தற்பொழுது கடமையாற்றுபவர் 2




ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர்-மே 24, 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3, 2004 முதல் தற்பொழுது வரை.தமிழகத்தின் ஆளுநராக அதிக நாட்கள் பதவி வகித்தவராக சுந்தர் லால் குரானா கருதப்ப்படுகின்றார்.ஐந்தரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். (செப்டம்பர் 13, 1982- பெப்ரவரி 17, 1988)தமிழகத்தின் ஆளுநராக குறைந்த நாட்கள் பதவி வகித்தவராக எம்.எம். இஸ்மாயில் தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். இவர் பதவி வகித்தக் காலம் 9 நாட்கள் மட்டுமே. (அக்டோபர் 27, 1980-நவம்பர் 4. 1980).



நன்றி மீண்டும் அடிப்படை புரிந்து நடப்போம் ......

Saturday, June 26, 2010

தமிழக அரசியல்

நம்முடைய தமிழ் நாட்டில் பல தரப்பட்ட அரசியல் கட்சி சுயநலத்துடனும் சில கட்சி பொதுநலத்துடனும்,இன்னும் பலதரபட்ட கட்சி பொழுதுபோக்குக்காக நடத்தப்படுகிறது.

தொகுதிகள்

தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234சட்டசபைத் தொகுதிகளாக , 39மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.


1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், திராவிட கொள்கைகள், பகுத்தறிவு கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்கு தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிச கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.

தமிழ் நாடு அரசு[1] 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது அதன் பின் இன்று ஒரவையான சட்டசபையை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகவும் , தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக அரசு செயலாற்றுகின்றது. நீதிபரிபாலணம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
காமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.

தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக் கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு பி. தியாகராயர் அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிட கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது.என்று சொல்வது மிகையாகது.

மொழி அரசியல் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கிய கூறாக விளங்கியது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா மற்றும் முத்துவேல் கருணாநிதி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.

1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர்.

அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும், சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கிய பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம் அடைந்தார். பதவி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்களினால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார்.

தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை தொடங்கனார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது

தமிழக அரசியலில் முதன் முறையாக திமுக காங்கிரஸ், கட்சியின் உதவியால் கூட்டனி ஆட்சி அமைத்தது.

சிந்திக்கவும்....,



கடைசியாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் கூட்டனிஆட்சி அமைய காரணம் சுயநலகட்சிகலால் மட்டுமே நடந்த்து. 100 வது ஆண்டிலாவது தனி தனி கூட்டனி அமைக்காமல் மனிதநேயத்துடன் இனைந்து செயல்படுவொம்.


நன்றி மீண்டும் சிந்திப்போம் .......

அடிப்படை உரிமைகள்

தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்புவோரின் சதவிகிதம் 83% ஆனால் முயற்சி எடுப்போர் சதவிகிதம் 15% மாற்றத்தை நோக்கியே மீண்டும் பயணம் ....

அடிப்படை உரிமைகள்


இந்த அடிப்படை உரிமைகள் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து, அதன் வழித் தோன்றலாக இங்கும் பயன்படுத்தப்படுகின்றது.இந்தியாவின் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது.தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.


ஆறு அடிப்படை உரிமைகளாவன.

1.சம உரிமை
2.சுதந்திர உரிமை
3.சுரண்டலை எதிர்க்கும் உரிமை
4.சமய சார்பு உரிமை
5.கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
6.அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை


நன்றி மீண்டும் சிந்திப்போம் .......

Friday, June 25, 2010

தமிழ்நாடு அரசு :

வணக்கம்.,

முதலில் அடிப்படை தெளிவோம். அடுத்தபடியாக உரிமைக்காக போராடுவோம்

தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். சூலை 1, 2008-இல் மக்கட்தொகை 66,396,000. இந்தியாவிலேயே அதிகப்படியாக 44% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.தமிழகத்தன் மக்கட்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள்(2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலகிரி, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறுஆழ் குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களை போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.தமிழ்நாடு பலமுனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றார்கள்.[1]

தமிழக அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிகிறார்) 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.தி.மு.க) எம்.ஜி.ராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.1967 முதல் 2001இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன்,இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி அகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.

கல்வி அறிவு வீதம் மொத்தம்: 73.47%
ஆண்கள்: 82.33%
பெண்கள்: 64.56%

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை

தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முக்கியத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது.இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன.கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளூவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு.விழாக்கள் பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும்அழைகப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முக்கிய திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (ஜனவரி 14 அல்லது 15) இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. நோன்பு பெருநாள், பக்ரீத், முகரம் இஸ்லாமியப் புத்தாண்டு பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் பிறந்த நாள், சரஸ்வதி (கல்விக் கடவுள்) பூஜை, ஆயுத பூஜை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கொடைக்கொண்டாட்டமாம் சித்திரைத்திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 14 அல்லது 15) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.

சமயவாரியாக மக்கள் தொகை
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 62,405,679 100%
இந்துகள் 54,985,079 88.11%
இசுலாமியர் 3,470,647 5.56%
கிறித்தவர் 3,785,060 6.07%
சீக்கியர் 9,545 0.02%
பௌத்தர் 5,393 0.01%
சமணர் 83,359 0.13%
ஏனைய 7,252 0.01%
குறிப்பிடாதோர் 59,344 0.10%


தமிழ்நாட்டு ஓவியக் கலை

தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும், சிதைந்த நிலையிலும் குகைகளிலும், பழைய அரண்மனைகளிலும், கோயில்களிலும், வேறு கட்டிடங்களிலும் காணப்படுகின்றன.ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புக்கள் பல சங்கப் பாடல்களிலே காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும், ஓவியம் பற்றிய தகவல்கள் இலக்கியங்களில் உள்ளன.

"ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற மணிமேகலை வரிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக்கூறியிருக்கின்றனர்"[1].ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானது. படம் என்னும் பெயர் இக்காரணத்தினாலேயே வந்தது என்பர் (படம் - வஸ்திரம்).முற்காலப் பாண்டியர் காலத்தைச் (கி.பி 550 - 950) சேர்ந்த குகை ஓவியங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இக்காலத்தைச் சேர்ந்த, சித்தன்னவாசல் என்னுமிடத்தில் உள்ள குடைவரைக் கோயில் ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது தவிர அரிட்டாபட்டி, திருமலைப்புரம், ஆனைமலை, கீழ்க்குயில்குடி, கீழவளவு, கரடிப்பட்டி ஆகிய இடங்களிலும் மேற்படி காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.தமிழ் நாட்டு ஓவியக் கலை வளர்ச்சியில் பல்லவர் காலத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. ஒவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமன்றிப் பல்லவ மன்னர்கள் சிலர் சிறந்த ஓவியர்களாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மாமண்டூர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனைமலை, ஆர்மாமலை ஆகிய இடங்களில் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன.இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியங்களோடு ஒப்பிடத்தக்க பெருமையுடைய ஓவியங்களை சோழர் காலம் தமிழ் நாட்டுக்கு வழங்கியது. தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயிலிலுள்ள ஓவியங்கள் இத்தகைய பெருமை வாய்ந்தவை.

விஜய நகரப் பேரரசு காலத்திலும் ஓவியக்கலை தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது. காஞ்சி கைலாச நாதர் கோவிலிலுள்ள ஓவியங்களைச் செப்பனிட்டதுடன், திருப்பருத்திக் குன்றம், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் ஓவியங்களை விஜயநகர அரசர்கள் வரைவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து நாயக்கர் காலத்து ஓவியங்களும் தமிழ் நாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆண்ட மராட்டியரும் தமிழ் நாட்டு ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். தற்காலத்தில் தஞ்சாவூர் ஓவியப் பாணி என்று அறியப்படுவது இவர்கள் காலத்தில் உருவானதே.

தமிழகக் கோயில்களும் ஓவியங்களும்

தமிழகக் கோயில்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது குறித்த சில தகவல்களை டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் எனும் நூலில் 198 முதல் 201 வரை உள்ள பக்கங்களில் தெரிவித்துள்ளார். அவை தமிழகத்தில் விசய நகர- நாயக்கரது ஓவியங்களை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவீழிமிழலை, சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருவெள்ளறை, அழகர்கோயில், நத்தம் கோவில்பட்டி, கூடலழகர் கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், புதுக்கோட்டை கோகர்னேஸ்வரர் கோயில், திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில், திருநெல்வேலி மாவட்டம் இடைகால், திருப்புடை மருதூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் ஆகிய இடங்களில் காணலாம்.
இவற்றில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பருத்திக் குன்றத்தில் மகாவீரர் கோயிலின் சங்கீத மண்டபத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. இதில் சில காட்சிகளே மிஞ்சியுள்ளன. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் கருவறையின் முன்னுள்ள மண்டபத்திலும், ஆண்டாள் ஊஞ்சல் மண்டபத்திலும், நரசிம்மர் கருவறைக்கு முன்பாகவுள்ள மண்டபத்திலும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரதி - மன்மதன், வஸ்திர அபகர்ணன், காளியன் என்னும் அசுரன் ஆகியோரது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, சிவன் உமையம்மையைத் திருமணம் புரியும் காட்சிகள், கோபியருடன் கண்ணன், முருகன் - வள்ளி திருமணக் காட்சி ஆகியன காணப்படுகின்றன.
திருவரங்கம் கோயில் வேணுகோபாலன் சந்நிதியின் முன்பாக உள்ள மண்டபத்தில் பாகவத புராணக் காட்சிகளும், ஸ்ரீரங்கமகாத்மியம் தொடர்பான காட்சிகளும் அமைந்துள்ளன.
தஞ்சை - திருவீழிமிழலைச் சிவன் கோயிலில் கண்ணனது லீலைகளே காணப்படுகின்றன. திருவெள்ளறை புண்டரிகாட்சர் கோயில் சித்திர மண்டபவிதானத்தில் திருமாலின் தசாவதாரம் மற்றும் இராமாயண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருவிளையாடற் புராணக் காட்சிகளைத் தீட்டியிருந்தனர். இவை சமீபத்தில் நடந்த திருப்பணியின் போது அழிக்கப்பட்டு விட்டன. இதில் எஞ்சியிருப்பது மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண நிகழ்ச்சியை இராணிமங்கம்மாள் கண்டுகளிப்பது போன்ற ஓவியத் தொகுதி மட்டுமே. மதுரை கூடழலகர் கோயிலானது அஷ்டாங்க விமானக் கோயிலாதலால் மேலிரண்டு அடுக்குக் கருவறைகளிலும் திருமாலின் அவதாரங்கள், மும்மூர்த்திகள், திக்கு பாலகர்கள் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. "மதுரை அழகர்கோயில் வசந்த மண்டபத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. கி.பி.1700-ல் வரையப்பட்ட இந்த ஓவியத் தொகுதியில் தெலுங்கு இராமாயணம் இடம் பெறுகிறது. இடில் தெலுங்கிலும், தமிழிலும் விளக்கம் எழுதப்பட்டுள்ளன. வட்டாரப் பழக்க வழக்கங்களின் தாக்கம் இடம் பெற்றுள்லது. இயக்க உத்திமுறை காணப்படுகிறது. ஆறுகளைக் காட்டும் போது வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதில் மீ, ஆமை முதலியனவும் வரையப்பட்டுள்ளன." [2].இதே போன்று இராமாயண ஓவியங்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணேசுவரர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளன.மதுரைக்கருகிலுள்ள நத்தம் கோவில்பட்டியில் உள்ள சிவன் கோயிலில் சுந்தரபுராணம் தொடர்பாகவும், லிங்கமநாயக்கன் என்னும் மன்னன் செய்த சேத்திராடனம் என்னும் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வந்த நிகழ்ச்சியையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.

தஞ்சை பிருகதீசுவரர் கோயிலில் சோழர்கால ஓவியங்களுக்கு மேலே தீட்டப்பட்டிருந்த நாயக்கர் கால ஓவியங்களும் கருவறையின் மேற்பகுதி வெளிச்சுவரின் மேற்கு நோக்கிய சுவரில் இடம் பெற்றுள்ளன. அவை திசைக் காவலர்களது ஓவியம், அரம்பை, ஊர்வசி, அசுரர்களும் தேவர்களும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, திருமால், போர்க்களக் காட்சி, துர்க்கை, சும்பன், நிசும்பனை அழித்தல் முதலான போர்க்காட்சிகளாகும்."[3].
சிதம்பரம் நடராசர் கோயிலில் இடம் பெற்றுள்ள விசயநகர நாயக்கரது சிற்பங்கள் லெபாக்ஷி பாணியை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. அவற்றில் ரிசிபத்தினிகள் சிவபெருமானின் அழகில் மயங்கித் தமது ஆடைநெகிழ பின் தொடரும் காட்சி மிக அருமையாகத் தீட்டப்பட்டுள்ளது. கும்பகோணம் இராமசுவாமி கோயிலின் கருவறைப் பிரகாரச் சுவரில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் இவை மறு திருத்தம் செய்யப்பட்டது போலத் தோன்றுகின்றன. நார்த்தாமலை விசயாலய சோழீசுவரர் கோயிலில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் சோழர் காலத்தவை என்றும், நாயக்கர் காலத்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் புகைபடிந்து காணப்படுகின்றன. திருக்கோட்டியூர் சௌமிநாராயணப் பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானம் இடம் பெற்றுள்ளதால் மேலிரு கருவறைகளில் திசைக் காவலர்களது ஓவியங்களும் திருமாலின் பல்வேறு அவதாரங்களும் என ஓவியங்கள் அமைந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாரது வரலாறு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் கோயில் கருவறைப் பிரகாரத்தில் 108 திவ்ய தேசங்களில் உறைகின்ற திருமாலின் வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் பெரும்பாலனவை அழிந்து விட்டன. இக்கோயிலின் கொடிக்கம்ப மண்டபத்தில் உள்ள சிறு மண்டபத்தின் விதானத்தில் நவதிருப்பதிகளில் உறைகின்ற திருமாலின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இடைகால் மற்றும் திருப்புடைமருதூர் கோயில்களில் இடம் பெற்றுள்ள நாயக்கர் கால ஓவியங்கள் இன்றும் அழியாது மிகத் தெளிவாக அக்கால ஓவியங்களை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. தவிர பாகவத புராணமும் இங்கு முழுமையாகத் தீட்டப்பட்டுள்ளது.


பதிவின் நீளம் கருதி மீண்டும் தொடரும் .....நன்றி