Home

Monday, June 28, 2010

ஆளுநர்

ஆளுநரே தமிழ்நாட்டில் மூத்த குடிமகன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946 ல் இருந்தே நியமனம்
செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்பொழுதுள்ளத் தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.தமிழக ஆளுநர் தென் இந்தியாவின் மாநிலமான தமிழ் நாடு மாநிலத்தில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

மதராஸ் இராஜதானி, மதராஸ் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் (புனித ஜார்ஜ் கோட்டை) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.இப்பொழுதுள்ள தமிழ்நாடு, மலபார் பிராந்தியமான வட கேரளம் , கடற்கரைப் பிராந்தியம் மற்றும் ராயலசீமா பிராந்தியமான ஆந்திரப் பிரதேசம் மற்றும் பெல்லாரி, தக்சன கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.
மதராஸ் இராஜதானி 1653 ல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மானிக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின் , மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ் நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளம் ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.[3]


பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு காலவரை
1 ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை 6 மே 1946 7 செப்டம்பர் 1948 1
2 கிருஷ்ண காமாரசிங் பவ சிங் 7 செப்டம்பர் 1948 12 மார்ச் 1952 1
3 ஸ்ரீ பிரகாசா 12 மார்ச் 1952 10 டிசம்பர் 1956 1
4 ஏ.ஜெ. ஜான் 10 டிசம்பர் 1956 30 செப்டம்பர் 1958 1
5 பகாலா வெங்கட்ட ராஜமன்னார் (தற்காலிகம்) 1 அக்டோபர் 1958 24 ஜனவரி 1958 1
6 பிஷ்ணுராம் மெதி 24 ஜனவரி 1958 4 மே 1964 1
7 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் 4 மே 1964 24 நவம்பர் 1964 1
8 பி. சந்திர ரெட்டி (தற்காலிகம்)[4] 24 நவம்பர் 1964 7 டிசம்பர் 1965 1
9 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்[nb 2] 7 டிசம்பர் 1965 28 ஜூன் 1966 1
10 சர்தார் உஜ்ஜல் சிங் (தற்காலிகமாக 16 ஜூன் 1967 வரை) 28 ஜூன் 1966 14 ஜனவரி 1969




மதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969,[2] அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.




# பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு காலவரை[nb 1]
1 சர்தார் உஜ்ஜல் சிங் 14 ஜனவரி 1969 27 மே 1971 1
2 கோடர்தாஸ் கைலாஷ் ஷா (கே. கே. ஷா) 27 மே 1971 16 ஜூன் 1976 1
3 மோகன் லால் சுகாதியா 16 ஜூன் 1976 8 ஏப்ரல் 1977 1
4 பி. கோவிந்தன் நாயர் (தற்காலிகம்)[5] 9 ஏப்ரல் 1977 27 ஏப்ரல் 1977 1
5 பிரபுதாஸ் பட்வாரி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1980 1
6 எம். எம். இஸ்மாயில் (தற்காலிகம்) 27 அக்டோபர் 1980 4 நவம்பர் 1980 1
7 ஸ்ரீ சாதிக் அலி 4 நவம்பர் 1980 3 செப்டம்பர் 1982 1
8 [[சந்தர் லால் குரானா (எஸ்.எல். குரானா) 3 செப்டம்பர் 1982 17 பெப்ரவரி 1988 1
9 பி. சி. அலெக்சாண்டர் 17 பெப்ரவரி 1988 24 மே 1990 1
10 சுர்ஜித் சிங் பர்னாலா 24 மே 1990 15 பெப்ரவரி 1991 1
11 பீஷ்ம நாராயண் சிங் 15 பெப்ரவரி 1991 31 மே 1993 1
12 எம். சென்னா ரெட்டி 31 மே 1993 2 டிசம்பர் 1996 1
13 கிரிஷன் காந்த் (தற்காலிகம்)[5] 2 டிசம்பர் 1996 25 ஜனவரி 1997 1
14 எம். பாத்திமா பீவி 25 ஜனவரி 1997 3 ஜூலை 2001 1
15 சி. ரங்கராஜன் (தற்காலிகம்) 3 ஜூலை 2001 18 ஜனவரி 2002 1
16 பி.எஸ். ராம்மோகன் ராவ் 18 ஜனவரி 2002 3 நவம்பர் 2004 1
17 சுர்ஜித் சிங் பர்னாலா 3 நவம்பர் 2004 தற்பொழுது கடமையாற்றுபவர் 2




ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர்-மே 24, 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3, 2004 முதல் தற்பொழுது வரை.தமிழகத்தின் ஆளுநராக அதிக நாட்கள் பதவி வகித்தவராக சுந்தர் லால் குரானா கருதப்ப்படுகின்றார்.ஐந்தரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். (செப்டம்பர் 13, 1982- பெப்ரவரி 17, 1988)தமிழகத்தின் ஆளுநராக குறைந்த நாட்கள் பதவி வகித்தவராக எம்.எம். இஸ்மாயில் தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். இவர் பதவி வகித்தக் காலம் 9 நாட்கள் மட்டுமே. (அக்டோபர் 27, 1980-நவம்பர் 4. 1980).



நன்றி மீண்டும் அடிப்படை புரிந்து நடப்போம் ......

No comments:

Post a Comment